நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது ஹைதராபாத்தில் காவல்துறை. கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த விழா ஒன்றில், பஹல்காம் தாக்குதலுடன் பழங்குடி சமூக மக்களை ஒப்பிட்டுப் பேசியதாக அந்த சமூ கத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அரசியல் செல்வாக்கில் பெற்ற ஆசிரியர் இட மாற்ற உத்தரவை ரத்து செய்து இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈரானில் இருந்து 311 இந்தியர்களை அழைத்து வந்த மற்றொரு விமானம் தில்லியில் ஞாயி றன்று மாலை தரையிறங்கியது; இதுவரை 1,400க்கும் மேற்பட்டோர் ஈரானில் இருந்து அழைத்து வரப்பட்டுள்னர். தலைக்கு ரூ.8 லட்சம் அறிவிக்கப்பட்ட பெண் நக்சலைட் சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். பாகிஸ்தானுக்கு ஆதரவாக உளவு பார்த்த குற்றச்சாட்டில் பஞ்சாப்பில் ராணுவ வீரர்களும், அவரது கூட்டாளியும் கைது செய்யப் பட்டனர். ஆனால் மொத்தம் எத்தனை பேர் என உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.