states

img

ம.பி: ஆம்புலன்ஸ் வராததால் கர்ப்பிணியைத் தள்ளு வண்டியில் அழைத்துச் சென்ற அவலம்!

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் ஆம்புலன்ஸ் வராததால் கர்ப்பிணியைத் தள்ளு வண்டியில் அழைத்துச் சென்ற அவலம் நடந்துள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் தாமோ அருகில் உள்ள ரானே கிராமத்தில் கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 2 மணி நேரம் ஆகியும் 108 ஆம்புலன்ஸ் வராததால், அப்பெண்ணை அவரது கணவர் கைலாஷ் அகிர்வால் தள்ளு வண்டியில் படுக்கவைத்து 2 கி.மீட்டர் தொலைவில் உள்ள சுகாதார மையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.  ஆனால் அங்கு மருத்துவர்களோ, செவிலியர்களோ இல்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இந்த சம்பவம் குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.