குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் இருந்த லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி (68) உயிரிழந்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட போயிங்க் 787-8 ரக ஏர் இந்தியா விமானம் இன்று விபத்துக்குள்ளானது. விமானத்தில் 230 பயணிகள், 2 பைலட்கள் மற்றும் 10 விமான ஊழியர்கள் இருந்துள்ளனர். விமானத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி இருந்துள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்த விஜய் ரூபாணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் லண்டனில் உள்ள தனது மகனை பார்ப்பதற்காக பயணம் மேற்கொண்டபோது, விமான விபத்துக்குள்ளாகி அவர் உயிரிழந்துள்ளார்.
மூத்த பாஜக தலைவரான ரூபானி, 2016 முதல் 2021 வரை குஜராத்தின் முதல்வராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.