அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் விவசாயத்துறைக்கு பிரச்சனை இல்லையாம்! பியூஷ் கோயல் மழுப்பல்
அமெரிக்காவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் விவசாயத்துறை க்கு பாதிப்பு இல்லை என ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் புதன் கிழமை மக்களவை யில் மழுப்பியுள்ளார். அமெரிக்கா இந்தி யாவிற்கு இடையி லான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக டிரம்ப் அறிவித்த பிறகு அமெரிக்காவின் விவசாயத்துறை செயலாளர் புரூக் ரோலின்ஸ் அமெரிக்க விவசாயிகளின் பொருட்கள் பிரம்மாண்ட மான இந்திய சந்தைக்கு ஏற்றுமதி செய் யப்படும் என இந்திய விவசாயத்துறை யை அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி திறந்து விட்டுள்ளதை அம்பலப்படுத்தி யுள்ளார். இந்நிலையில் தான் இந்தியாவின் உணர்வுப்பூர்வமான துறைகளான விவசாயம் மற்றும் பால்வளத் துறைகள் இந்த ஒப்பந்தத்தில் முற்றிலும் பாது காக்கப்பட்டுள்ளன என ஒப்பந்தம் குறித்து மக்களவையில் பேசிய பியூஷ் கோயல் மழுப்பியுள்ளார்.
