tamilnadu

img

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரம்பலூரில் 102 பயனாளிகளுக்கு ரூ.91.54 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் புதன்கிழமை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் க.கண்ணன், வருவாய் கோட்டாட்சியர் அனிதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.