states

img

இஸ்ரோ - நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள்

இஸ்ரோ - நாசா இணைந்து  உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள்

ஜூலை 30இல்  விண்ணில் பாய்கிறது!

இஸ்ரோ-நாசா  இணைந்து உருவாக்கிய அதிநவீன நிசார் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக ஜூலை 30 அன்று விண்ணில் செலுத் தப்பட உள்ளது.  2014 செப்டம்பர் மாதம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன மான இஸ்ரோ, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா உடன் ஓர் ஒப்பந்தம் மேற்கொண்டது.  இதன் அடிப்படையில் இரு நாடு களின் விஞ்ஞானிகள் கூட்டுழைப் பில் சுமார் 12,000 கோடி மதிப்பிலான நிசார் செயற்கைக் கோளின் தயா ரிப்புப் பணிகள் கடந்தாண்டு நிறைவுபெற்றன. புவியின் மேற்பரப்பு மாற் றங்களை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த நிசார் (NASA-ISRO Synthetic Aperture Radar) செயற்கைக்கோள் பல் வேறுகட்ட சோதனைகள் முடிந்த நிலையில் ஜிஎஸ்எல்வி எப்-16 ராக் கெட் மூலமாக ஸ்ரீஹரிகேட்டாவில் உள்ள 2-ஆவது ஏவுதளத்தில் இருந்து ஜூலை 30 மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் விஞ்ஞானிகள் தற் போது ஈடுபட்டுள்ளனர். இந்த செயற்கைக்கோள் புவியில் இருந்து 743 கி.மீட்டர் தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. நிசார் புவி கண்காணிப்புக்காக தயாரிக்கப்பட்ட அதிநவீன ரேடார் செயற்கைக்கோளாகும். இதன் எடை 2,392 கிலோவாகும். 3 முதல் 5 ஆண்டுகள் இதன் ஆயுட்காலம் இருக்கும் எனவும் இது பூமியின் மாறிவரும் சூழல்கள் பற்றி விரி வான ஆய்வுகளை மேற்கொள் ளும். இதன்மூலம், புவியின் சுற்றுச் சூழல் அமைப்புகள், பருவநிலை மாற்றங்கள், பேரிடர் மேலா ண்மை உட்பட பல்வேறு அம்சங் கள் குறித்த தகவல்களை பெறமுடி யும். அதாவது, பூமியின் மேற் பரப்பில் ஏற்படும் மிகச்சிறிய மாற் றங்களைக் கூட கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த செயற்கைக்கோள் பூமியை 12 நாட்களுக்கு ஒருமுறை சுற்றிவந்து துல்லியமான தரவுகள் மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை இரவு, பகல் என அனைத்து நிலைகளிலும் வழங்கும். இதற்காக எல் பேண்ட், எஸ் பேண்ட் ஆகிய சிந்தடிக் அப் ரேச்சர் ரேடார் தொழில்நுட்பங்கள் செயற்கைக்கோளில் பயன் படுத்தப்பட்டுள்ளன.  ஒரே செயற்கைக்கோளில் 2 அலைவரிசைகள் கொண்ட கருவி கள் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும். மேலும், நிசார் அனுப்பும் தகவல்களை உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியா ளர்களும் பெறமுடியும்.