states

img

மின்னல் தாக்குதல் உ.பி.,யில் 5 சிறுவர்கள் உயிரிழப்பு

மின்னல் தாக்குதல் உ.பி.,யில்  5 சிறுவர்கள் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை இடி - மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்நிலையில், கவுசாம்பி மாவட்டத் தின் சராய் அங்கில் பகுதியில் மின்னல் தாக்கி ஒரு சிறுமி உட்பட 5 சிறுவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக சராய் அங்கில் துணை ஆய்வாளர் சுனில் குமார் கூறுகையில்,”ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றிருந்த போது ஒரு சிறுமி உட்பட 5 சிறுவர்கள் மின்னல் தாக்குதலுக்கு உள்ளானார்கள். உயிரிழந்த அனைவரும் 10 முதல் 13 வயதுடையவர்கள் ஆவர்” என அவர்  கூறினார்.  படுகாயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி ரூபா தேவி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.