‘முதன்மை மாநிலமாக கேரளம்’
கோழிக்கோடு கேரள மாநிலம் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் உள்ள 6 தொகுதிகளில் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) வேட்பாளர்க ளுக்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் பங்கேற்று உரையாற்றினார். பொதுக் கூட்டங்களில் அவர் பேசியதாவது: எல்டிஎப் ஆட்சியின் கீழ் கேரளம் அனை த்து சமூக மற்றும் மக்கள் நல வளர்ச்சி குறியீடுகளில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவெடுத்துள்ளது. மேலும், வகுப்புவாத நல்லிணக்கத்தின் புகலிடமா கவும் கேரளம் திகழ்கிறது. கேரளத்தின் இந்த யதார்த்தமான வளர்ச்சியை காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இரு கட்சிகளும் மக்க ளின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தவிர்த்துவிட்டு, தரம் தாழ்ந்த தனிநபர் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன. குறிப்பாக கொள்கைப் பிடிப்பற்ற கட்சி யாக காங்கிரஸ் மாறிவிட்டது. அதனால் தான் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.பி.,க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ள னர்” என அவர் கூறினார்.
