அரபிக் கடலில் தயார் நிலையில் இந்திய கடற்படை
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே வார்த்தை மோதல் மற்றும் ஒப்பந்தம் ரத்து உள் ளிட்ட சம்பவங்களால் போர் பதற்றம் உருவாகியுள்ளது. இந்நிலையில், அரபிக் கடலில் இந் திய கடற்படைக் போர்க் கப்பல்கள் ஏவு கணை தாக்குதல்களை முறியடிக்கும் ஒத்திகையில் ஈடுபட்டிருப்பதாக கடற் படை தெரிவித்துள்ளது. இது குறித்து கடற்படை வெளியிட்டுள்ள பதிவில், “போர் கப்பல்களிலிருந்து அச்சுறுதல் களாக வரும் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் ஏவுகணை ஒத்திகையில் இந்திய கடற்படை போர்க் கப்பல்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளன. தொலை தூர இலக்கை தாக்கும் நடவடிக்கை களுக்கு கடற்படை தளவாடங்கள் தயார் நிலையில் உள்ளன. நமது நாட்டின் கடல் சார் பாதுகாப்பை உறுதிசெய்ய, எவ்வித அச்சுறுத்தல்கள் எந்நேரம் எந்த வகை யில் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ள கடற்படை தயார் நிலையில் உள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது.