states

img

ஆர்எஸ்எஸ் பேரணியில் பங்கேற்ற அரசு அதிகாரி இடைநீக்கம்

ஆர்எஸ்எஸ் பேரணியில் பங்கேற்ற அரசு அதிகாரி இடைநீக்கம்

தமிழ்நாட்டை முன்மாதிரியாக எடுத்து கொண்டு கர்நாடகாவில் உள்ள அரசு கட்டடங்களில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என முதலமைச்சர் சித்தராமையாவுக்கு, அம்மாநில அமைச்  சர் பிரியங்க் கார்கே கடிதம் எழுதி யிருந்தார். இதனையடுத்து தமிழ்நாட்டில்  அரசு நிலம், கட்டடங்களில் ஆர்எஸ்எஸ்  நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டி ருப்பது போல், கர்நாடகாவிலும் தடை விதிப்பது குறித்து மதிப்பாய்வு செய்ய தலைமைச் செயலருக்கு முதலமைச்சர் சித்தராமையா உத்தரவு பிறப்பித்தார். மேலும், கர்நாடக மாநிலத்தில் பொது  இடங்கள், பள்ளிக்கூட வளாகங்கள் போன்றவற்றில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நடைபெற தடைவிதிக்கும் வகையில் விதி கொண்டுவர அம்மாநில அமைச்ச ரவை முடிவு செய்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியில் அந்த அமைப்பின் சீருடை அணிந்து கலந்துகொண்ட பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி இடைநீக்கம் செய்யப்  பட்டார்.