தலித் ஆராய்ச்சி மாணவருக்கு கொலை மிரட்டல்
பாஜக தலைவர் மீது வழக்கு
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ பல்கலைக்கழகத்தில் தீபக் கன்னோஜியா என்ற மாணவர் தலித் ஆராய்ச்சி பிரிவில் பயின்று வரு கிறார். துர்திபார் கிராமத்தைச் சேர்ந்த தீபக், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிக ழும் தலித் மக்களின் நிலைமையை அம்ப லப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மே 21 அன்று மாவட்ட பாஜக தலைவர் அலோக் சிங், தீபக் கன்னோஜியாவுக்கு கொலை மிரட் டல் விடுத்துள்ளார். என்ன காரணத்தி ற்காக அவர் கொலை மிரட்டல் விடுத்தார் என செய்திகள் வெளியாகவில்லை. இதுதொடர்பாக உபான் காவல் நிலையத்தில் தீபக் கன்னோஜியா உடன டியாக புகார் அளித்துள்ளார். ஆனாலும் காவல்துறையினர் 15 நாட்களுக்குப் பிறகு அலோக் சிங் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அலோக் சிங் முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஜ் சேக ருடன் நெருங்கிய தொடர்புடையவர் என செய்திகள் வெளியாகியுள்ளன.