திருவள்ளூர், ஜூன் 19- காதல் திருமண தம்பதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கை விரைந்து விசா ரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: திருவள்ளூர் மாவட்டம், திருவலங் காடு ஒன்றியம் களாம்பாக்கம் லட்சுமி மகன் தனுஷ் (23) தேனி மாவட்டம் வனராஜா மகள் விஜயஸ்ரீ (21) இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 15 அன்று பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். பதிவு திருமணம் முடித்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்து பெண்ணின் தந்தையை வர வழைத்து இருவரும் திருமணம் செய்து கொண்ட தகவலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெண்ணின் தந்தை மகளை தன்னோடு வருமாறு அழைத்துள்ளார். நான் கணவரோடு தான் இருப்பேன். என்னை யாரும் கட்டாயப்படுத்த வில்லை. என் விருப்பத்துடன் தான் திருமணம் செய்து கொண்டுள்ளேன் என்று உறுதியாக தெரிவித்ததால் காவல்துறை இருதரப்பினரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.
பெண்ணின் தந்தை வனராஜா தேனியில் மிகப்பெரும் தொழில் அதிபர் என்பதும் வசதியான குடும்பம் என்பதும் தெரிய வருகிறது. எனவே தனது மகள் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் இவர்களை எப்படியாவது பிரிக்க முயற்சித்துள் ளார். கடந்த ஜூன் 7 அன்று பெண்ணின் குடும்பத்தினர் ஏடிஜிபி காரில் களாம்பாக்கத்தில் உள்ள தனுஷ் வீட்டிற்கு சென்றுள்ளனர். திருமண தம்பதி இல்லாததால் தனுஷின் தம்பியான 17 வயது சிறுவனை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. உடனடி யாக தனுஷின் தாயார் லட்சுமி காவல் துறை உதவி எண் 100 க்கு போன் செய்து கடத்தப்பட்ட விவகாரத்தை தெரி வித்துள்ளார். அதன் பிறகு சில மணி நேரங்களுக்கு பிறகு சிறுவனை விட்டு சென்றுள்ளனர். கடத்தப்பட்ட சிறுவனின் தாயார் ஜூன் 7அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறை பெண்ணின் தாய், தந்தை உட்பட சிலரை கைது செய்தனர். ஏடிஜிபி-யின் காரையும் பறிமுதல் செய்தனர்.காரில் பெருந்தொகை இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆயுத ப்படை காவல்துறையின் ஏடிஜிபி யாக உள்ள எச்.எம்.ஜெயராம் என்ப வரின் கார் கடத்தலுக்கு பயன்படுத்தப் பட்டதும், காவல்துறை அதிகாரியே கடத்தலுக்கு துணை போயிருப்பதும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. ஜூன் 16 அன்று உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன் அதிரடியாக காவல்துறை ஏடிஎஸ்பி யை கைது செய்ய உத்தரவிட்டார். கே.வி. குப்பம் சட்டமன்ற உறுப்பி னர் ஜெகன் மூர்த்தி க்கும் இந்த வழக்கில் தொடர்புள்ளதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில் சட்டமன்ற உறுப்பினரும் காவல்துறை விசார ணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தியதோடு சிறுவன் கடத்தப் பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உடனடியாக விசா ரணை செய்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார் .
காவல்துறையின் உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒரு அதிகாரி, நீதி மன்ற வளாகத்திலேயே கைது செய்யப் பட்டிருப்பதும், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் கடும் நடவடிக்கைக்கு உட்படுவார்கள் என்ற நீதிபதியின் உத்தரவு வரவேற்க தகுந்ததாகும். தம்பதியரை பிரிக்கவே பெண்ணின் குடும்பத்தார், பெருந் தொகையை ஒருசிலரிடம் கொடுத்துள் தாக தெரிகிறது. இதனை காவல்துறை யினர் முழுமையாக விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமண விவகாரத்தில், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டா லும் பொருளாதார ரீதியாக ஏழ்மை நிலையில் உள்ள ஒருவரை திருமணம் செய்து கொண்டாலும் தம்பதியை பிரி ப்பதற்கு பல வகையில் ஈடுபடுகிறார் கள். காதல் திருமணம் மற்றும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்க ளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வராக இருந்தால் சொந்த மகளையே படுகொலை செய்ய துணிவதும் ஆசை வார்த்தை காட்டி இருவரையும் வர வழைத்து படுகொலை செய்வதிலும் பெற்றோர்களின் சாதிய வன்மம் வெளி ப்படுகிறது. எனவே சாதி மறுப்பு தம்பதி களுக்கு மாநில அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். எனவேதான் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சாதிமறுப்பு காதல் திரு மணம் செய்து கொள்பவர்களுக்கு உரிய பாதுகாப்பும் ஆணவப்படு கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தனுஷ் - விஜயஸ்ரீ, திருமண விவகாரத்தில் தம்பதியரை பிரிக்கும் நோக்கத்தோடு கடத்தல் விவ காரத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். தனுஷ் குடும்பத்திற்கும் திருமணமான காதல் தம்பதிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். காதல் மற்றும் சாதி மறுப்பு திருமண செய்து கொள்ளும் விவகார ங்களில் அரசு தலையிட்டு, சட்டத்திற்கு புறம்பாக செயல்படு வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசை சிபிஎம் திருவள்ளூர் மாவட்டக் குழுவின் சார்பில் வலியுறுத்துகிறோம். நீதிமன்ற விசாரணைக்கு பிறகு ஜூன் 17 அன்று ஏடிஜிபி ஜெயராம் மற்றும் கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்தி ஆகியோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். சட்ட மன்ற உறுப்பினரிடம் விசாரிக்கும் போது 500க்கும் மேற்பட்ட காவலர்கள் அவரது வீட்டின் முன்பு குவிக்கப்பட்டு பதற்றத்தை ஏற்படுத்திய காவல் துறையின் அணுகுமுறை ஏற்கத்தக்க தல்ல. ஏடிஜிபி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டி ருப்பதால் அவரை உடனடியாக துறை ரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கோபால் தெரிவித்துள்ளார்.