ஆகாஷ் ஏவுகணை சோதனை நிறைவு
ஆகாஷ்-என்ஜி ஏவுகணை அமைப்பின் சோதனைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வெற்றி கரமாக நிறைவு செய்துள்ளது. இந்த ஏவுகணை உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிவேக, குறைந்த உயர மற்றும் நீண்ட தூர, அதிஉயர இலக்குகள் உட்பட பல்வேறு வான் வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராகஅதிக துல்லியத்தை வெளிப்படுத்தக் கூடிய அடுத்த தலைமுறை ஏவுகணை என கூறப்படுகிறது. இது இந்திய வான் பாதுகாப்புக்கு மேலும் வலுச்சேர்க்கும் என கூறப் பட்டுள்ளது.
