கார் - லாரி மோதல் மேற்குவங்கத்தில் 9 பேர் பலி
மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தின் தேசிய நெடுஞ்சாலை 18இல் கார் - லாரி நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை காலை 6:30 மணியளவில் பாலாராம்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நாம்சோல் கிராமத்திற்கு அருகே இந்த கோர விபத்து நிகழ்ந்தது. புருலியாவின் அடபானா கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு ஜார்க்கண்டின் நிம்திஹ் பகுதியில் உள்ள திலைதண்டுக்குச் சென்றுகொண்டிருந்த கார் விபத்தில் சிக்கியுள்ளது. காரில் பயணித்த 9 பேரும் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏர் இந்தியா பாதுகாப்பு மீறலில் ஈடுபட்டது டிஜிசிஏ பரபரப்பு குற்றச்சாட்டு
விமானங்கள் பாதுகாப்புச் சோதனைகள் நிலுவையில் இருந்தபோதிலும் கூட, அந்த விமானங்கள் இயக்கப்பட்டதாகக் கூறி, ஏர் இந்தியா நிறுவனத்தை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ -DGCA) எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக ராய்ட்டர்ஸ் வெளி யிட்டுள்ள செய்தியில், பாதுகாப்புச் சோதனை மேற்கொள்ள வேண்டிய ஏர்பஸ் ஏ-320 ஜெட் விமானம் ஒரு மாத காலம் ஆகியும் சோதனைக்கு உட்படுத்த ப்படாமல், துபாய், ரியாத், ஜெட்டா போன்ற சர்வதேச இடங்களுக்கு பயணி த்துள்ளது. அதே போல ஏர்பஸ் ஏ-319 விமானம், பாதுகாப்புச் சோதனையில் 3 மாதங்களுக்கும் மேலாக உட்படுத்தப் படாமல், உள்நாட்டு வழித்தடங்களில் பயன்படுத்தப்பட்டது கண்டறியப் பட்டது. இவைதவிர மற்றொரு விமான மும் பாதுகாப்புச் சோதனைக்கு உட் படுத்தப்படாதது கண்டறியப்பட்டுள்ளது. இந்த விமானங்களில் அவசர காலத்தில் தப்பிப்பதற்கான அவசர உபரணங் களை ஆய்வு செய்ய வேண்டியிருந்தது. ஆனால் பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தாமல், விமானத்தை இயக்கு வது என்பது நிலையான விமானத் தகுதி மற்றும் பாதுகாப்புத் தேவைகளை மீறுவ தாகும். இதனை ஏர் இந்தியா கண்டிப்பாக சரி செய்வது நல்லது என கூறப்பட்டுள் ளது. ஆனால் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் தொடர்பாக டிஜிசிஏ எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் 8 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து
அகமதாபாத் விமான விபத்து க்கு பிறகு ஏர் இந்தியா விமான ங்களுக்கு நடத்தப்படும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் ஈரான் - இஸ்ரேல் மோதல் காரணமாக அடுத்த சில நாட் களுக்கு 15% விமான சேவைகளை குறைக்க இருப்பதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை 8 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தில்லி - மெல்போர்ன் (ஏஐ308) சென்னை - மும்பை (ஏஐ571) துபாய் - சென்னை (ஏஐ906) மெல்போர்ன் - தில்லி (ஏஐ309 - மறுமார்க்கம்) துபாய் - ஹைதராபாத் (ஏஐ-2204) புனே - தில்லி (ஏஐ874) அகமதாபாத் - தில்லி (ஏஐ456) ஹைதராபாத் - மும்பை (ஏஐ2872)