states

img

தீவிரமடையும் பாஜகவிற்கு எதிரான விவசாயிகளின் எதிர்ப்பு அலை

குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 13 கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்க ளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள், விவசாயி கள் தில்லியை முற்றுகையிட்டு இரண்டு கட்டப் போராட்டத்தை நடத்தினர். போராடிய விவசாயி களை ஏதோ அண்டை நாட்டு எல் லையில் போரில் ஈடுபட்ட வெளி நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்று, தில்லி எல் லையில் மோடி அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறை, துணை ராணுவப் படை மற்றும் ஹரியானா பாஜக அரசின் காவல்துறை ஆகியவற் றின் மூலம் விவசாயிகள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி யது. இரண்டு கட்ட போராட்டம், மோடி அரசின் தாக்குதலில் 800க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், “எங்கள் மீது தாக்குதல் நடத்தி, எங்களது நண்பர்களை கொன்று விட்டு, எதற்கு எங்கள் ஊரில் வாக்குக்  கேட்க வருகிறீர்கள்?” என விவசா யிகள் கேள்வி எழுப்பி ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தரும் பாஜகவினரை விரட்டிய டித்து வருகின்றனர். இதில் ஹரி யானா மாநிலத்தில் பாஜக வேட் பாளர்களின் நிலைமை படுமோச மாக உள்ளது. சிர்சாவில் அசோக் தன்வார், அம்பாலாவில் பான்டோ கட்டாரியா, சோனிபட்டில் மோகன் லால் படோலி, ரோடக்கில் அரவிந்த்  சர்மா, மகேந்திர காட்டில் தரம்பிர் சிங், குருக்ஷேத்ராவில் நவீன் ஜிண்டால் போன்ற பாஜக வேட்பா ளர்களை விவசாயிகள் ஒன்று திரண்டு விரட்டியடித்ததால், தங்க ளது பிரச்சாரம் மற்றும் பேரணிக ளை ரத்து செய்து, வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். 

முன்னாள் முதல்வர்  கட்டார் ஓட்டம்
பாஜக மூத்த தலைவரும், ஹரி யானா முன்னாள் முதல்வருமான மனோகர் லால் கட்டார் மக்க ளவை தேர்தலில் கர்னூல் தொகுதி யில் களமிறங்கியுள்ளார். இவர் பிரச்சாரம் செய்யும் இடங்களெல் லாம்  விவசாயிகள் கருப்புக் கொடி யுடன் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர். இதனால் மனோகர் லால் கட்டார் பிரச்சாரக் கூட்டங்க ளை ரத்து செய்து கட்சி அலுவல கத்திற்கு சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4 நாட்களாக அவர் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி யுள்ளது.

பிரதமர் மோடியின் பிரச்சாரமும் ரத்து
ஹரியானா மாநிலத்தில் உள்ள 10 மக்களவை தொகுதிகளுக்கும் 6ஆவது கட்டத்தில் மே 25 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பிரத மர் மோடி ஹரியானாவில் மே 18  அன்று முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். முன்னாள் முதல்வர் கட்டார் உட்பட பாஜக வேட்பாளர்கள் விவசாயிகளால்  விரட்டியடிக்கப்பட்டு வருவதால், பிரதமர் மோடியின் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெறுவது நிச்சய மற்றது என பாஜக மேலிடம் கூறி யுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.

“இந்தியா” கூட்டணிக்கு 
7 தொகுதிகளுக்கு மேல் கிடைக்கும்

ஹரியானாவில் விவசாயிகள், பொதுமக்கள் மோடி மற்றும் பாஜகவினர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். பிரச்சாரம் செய்யவே பாஜகவினர் தயங்கிடும் நிலையில், ஜீரோ கிரவுண்ட், லோக் போல் உள்ளிட்ட கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள, கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி அடங்கிய “இந்தியா” கூட்டணி மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 7 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்ற வாய்ப்புள்ளது என்றும், ஜேஜேபி கட்சியின் ஆதரவு நிலைப்பட்டால் ஹரியானாவில் பாஜக “ஒயிட் வாஷ் (அனைத்தையும் இழக்கலாம்)” ஆகலாம் எனவும் கருத்துக்கணிப்புகளில் தகவல் வெளி யாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

;