ஸ்ரீநகர்,டிச.30- ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் உள்பட ஆறு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஐஜி விஜய்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காஷ்மீர் ஐஜி விஜய்குமார் கூறுகையில், அனந்த்நாக் மாவட்டம் நவ்காம் பகுதியிலும் குல்காம் மாவட்டத்தில் மிர்ஹாமா கிராமம் பகுதிகளில் புதன்கிழமை இரவு முதல் பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த னர். இதில், இரண்டு இடங்களில் மொத்தம் ஆறு தீவிரவாதி கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் பாகிஸ்தான் மற்றும் இருவர் உள்ளூர் தீவிரவாதிகள். மேலும், இரண்டு பேரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகின்றன. கொல்லப்பட்டவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புடையவர்கள். கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்றார்.