மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ளது பது லியா பிளாக் நிலக்கரிச் சுரங்கம். கங்கா ராம்சக் மைனிங் பிரைவேட் லிமிடெட் (ஜிஎம்பிஎல்) நிறுவ னத்திற்கு சொந்த மான இந்த சுரங் கத்தில் நிலக்கரியை நசுக்கும் போது வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர வெடிவிபத்தில் தொழிலா ளர்கள் பலர் சிக்கிக் கொண்ட நிலையில், அவர்களின் உடல்கள் சிதைந்து வெகு தொலைவில் தூக்கி வீசப்பட்டன. அந்த இடத்தில் பணிபுரியும் தொழிலாளர்களி டையே கூட்ட நெரிசலில் பலர் படுகாயம டைந்த நிலையில், இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் பிர்பூம் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.