states

பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவில் தெருவில் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்

பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ் டிரா மாநில தலைநகர் மும்பை யில் உள்ள கமணி சந்திப்புக்கு அருகே குர்லா தெரு. இந்த தெருவில் பிர சவத்திற்காக மருத்துவமனை நோக்கிச் சென்ற  ஸ்வர்ணா மிர்கல் (30) என்ற பெண் தெருவி லேயே குழந்தையைப் பெற்றெடுத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தக வல் அறிந்த மும்பை காவல்துறையின் “நிர்  பயா பதாக்” குழு மயங்கிக் கிடந்த தாயையும்,  குழந்தையையும் காப்பாற்றி அருகில் உள்ள  பிரஹன்மும்பை நகராட்சி மருத்துவமனை யில் சேர்த்தனர். 

ஆம்புலன்ஸ் சேவை இல்லையா?

மும்பை நகரில் உள்ள கமணி சந்திப்பு மக்கள் நடமாட்டம், போக்குவரத்து அனைத் தும் நிறைந்த பகுதியாகும். இப்படிப்பட்ட இடத்தில் மிகுந்த வலியோடு நடந்து சென்று, நடுத்தெருவிலேயே ஸ்வர்ணா மிர்கல் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். 

கமணி சந்திப்புக்கு மிக அருகிலேயே பிரஹன்மும்பை நகராட்சி மருத்துவமனை இருந்தும், ஸ்வர்ணா மிர்கலுக்கு ஆம்பு லன்ஸ் சேவை வழங்காதது கடும் சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம்  தொடர்பாக போலீசார் விளக்கம் அளிக்க  மறுத்து விட்டனர்.