states

img

உணவுப் பொருட்களின் விலைகள் உயரலாம்!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் எச்சரிக்கை

மும்பை, ஜூன் 26 - எல்நினோ நிகழ்வால் பருவ மழை குறைய வாய்ப்பு உள்ளதால், இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலைகள் உயரும் அபாயம் உள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். நடப்பாண்டு பருவமழையில் எல்நினோ தாக்கத்திற்கான சாத்தியக் கூறுகள் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், பருவ மழை குறையும் என்பதால், உண வுப் பொருட்களின் விளைச்சல் குறைந்து விவசாயம், நுகர்வு மற்றும் பொருளாதாரத்தை பெருமளவில் அச்சுறுத்தும் என எதிர்பார்க்கப்படு கிறது. இந்நிலையில், எல்நினோ தாக்கம் மற்றும் விலைவாசி உயர்வு குறித்து, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியிருப்பதாவது: 2024 நிதியாண்டில் பொருளா தாரம் 6.5 சதவிகிதம் வளர்ச்சி அடை யும். கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 2.50 சதவிகிதம் உயர்த்தி யது மற்றும் விநியோக தரப்பில் எடுத்த நடவடிக்கைகளால் கடந்த ஆண்டு  7.8 சதவிகிதமாக இருந்த பண வீக்கம் 4.25 சதவிகிதமாக குறைந்துள் ளது. பணவீக்கம் தொடர்ந்து கண் காணிக்கப்பட்டு வருகிறது. அடுத்த நிதி யாண்டில் பணவீக்கம் 5.1 சதவிகித மாக உயரலாம். ஆனால் அதனை 4  சதவிகிதத்திற்குள் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வட்டி விகிதத்துக்கும் பண வீக்கத்திற்கும் நேரடித் தொடர்பு உள் ளது. ரஷ்யா- உக்ரைன் போர் எதி ரொலியால் பொருட்களின் விலை அதி கரித்து பணவீக்கம் உயர்ந்தது. இந்தாண்டு வழக்கமான பருவமழை இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சர்வதேச அளவில் நில வும் நிச்சயமற்ற தன்மை மற்றும் எல்  நினோவால் பாதிப்பு ஏற்படலாம் என  வந்த முன்னெச்சரிக்கை ஆகியவை காரணமாக சில சவால்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவை எந்த அளவு பாதிப்பை ஏற்படுத் தும் என பார்க்க வேண்டும். அவ்வாறு பாதிப்பு ஏற்படும் நிலையில், உணவுப் பொருட்கள் விலை உயர்ந்து, உணவு பணவீக்கத்தில் அது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 3-இல், 2 பங்கு ரூ. 2,000 நோட்டுகள் வங்கிக்கு வந்துள்ளன “மார்ச் 31 கணக்கீட்டின்படி ரூ. 3.62 லட்சம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இந்நிலையில், கரன்சிகளை திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்ட மே  19-க்குப் பிந்தைய ஒரு மாதத்துக் குள் மூன்றில் இரண்டு பங்கு 2,000  நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப் பட்டுவிட்டன. அதாவது ஒட்டுமொத்த மாக புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் ரூ. 2.41 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் வங்கி களுக்கு திரும்பிவந்து விட்டன. இதில், 85 சதவிகிதம் டெபாசிட் செய்யப் பட்டுள்ளது. எஞ்சிய தொகை ஏனைய கரன்சிகளாக மாற்றிக் கொள்ளப் பட்டுள்ளது” என்றும் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.