போபால், டிச.11- பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில், மாவட்ட காவல்துறை உயரதிகாரி ஒருவர், இஸ்லாமி யர்களையும் சீக்கியர்களையும் தீவிரவாதிகள் என்று கூறி சுற்றிக்கை அனுப்பியது சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி மாவட்டக் காவல்துறை கண்கா ணிப்பாளராக இருப்பவர் சுனில் குமார் ஜெயின். இவர், கடந்த டிசம்பர் 6 அன்று, மாநிலத்தின் ஆளு நர் மங்குபாய் படேல் கட்னி மாவட் டத்திற்கு வருகை தந்தபோது பாது காப்பு நடவடிக்கைகளை மேற் கொள்வதற்காக இரண்டுபக்க சுற்ற றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், 23 விதி முறைகளை வகுத்தளித்துள்ள அவர், ஆறாவது விதிமுறையில் “சீக்கியர்கள், இஸ்லாமியர்கள், ஜே.கே.எல்.எப் அமைப்பினர், உல்பா அமைப்பினர், சிமி அமைப்பி னர், விடுதலைப் புலிகள் ஆகியோர் மீது கவனம் செலுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதுதான் தற்போது சர்ச்சையைக் கிளப்பி யுள்ளது. இந்தச் சர்ச்சைக்குரிய சுற்ற றிக்கையின் நகலைத் தனது டுவிட்டர்
பக்கத்தில் பதிவிட்டு காங்கி ரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ம.பி. மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளருமான கே.கே.மிஸ்ரா கடுமையாக விமர்சித்துள்ளார். “எஸ்.பி. கட்னிக்கு நன்றி. இவ்வளவு நாட்களாக பாஜக மட்டுமே நாட்டின் விவசாயிகளையும், முஸ்லிம்களை யும் தீவிரவாதிகளாக நடத்தி யது. தற்போது நீங்களும், உங்கள் காவல்துறையினரும் அதிகா ரப்பூர்வமாக சீக்கியர்களையும், முஸ்லிம்களையும் ஆளுநரின் வருகையை ஒட்டி தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தியுள்ளீர்கள். நீங்கள் காவல்துறை கண்கா ணிப்பாளரா, பாஜக பேச்சாளரா? இந்த அரசு உங்களுக்கு நிச்சயம் பத்மஸ்ரீ விருது வழங்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் செய்தித் தொடர் பாளரும், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த தலைவருமான நரேந்திர சலூஜாவும் “தேசப்பற்று மிக்க சீக்கிய சமூகத்தை தீவிரவாதிகளாக குறிப்பிட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.
கட்னியின் காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனினும், சிவராஜ் சவுகான் அரசுக்கும், பாஜகவுக்கும் சுனில் குமார் ஜெயினின் எண்ணவோட்டமே இருப்பதால் அது நடக்காது” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், “சுற்றறிக்கை யில் இடம்பெற்றது தட்டச்சு செய்த வரின் பிழை என்றும், அது குறித்து மன்னிப்பு கோருவதாகவும் கட்னி யின் காவல் கண்காணிப்பாளர் சுனில் குமார் ஜெயின் சமாளித்துள் ளார். “தட்டச்சு செய்தவரின் பிழைக்காக வருத்தம் கொள்கி றேன். யாரின் உணர்வுகளையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை. இந்தத் தவறைச் செய்த அந்த எழுத்தருக்கு நோட்டீஸ் விடுக்கப் பட்டு உள்ளது. அதன்மீதான அவரின் பதிலின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க படும்” என்றும் சுனில் குமார் அடுத்த வர் மீது பழியைத் தூக்கிப் போட்டுள் ளார்.