சென்னை, ஜூலை 20- மணிப்பூர் பெண்களை நிர்வாணமாக்கி வன்கொடுமை இழைக்கப்பட்டதற்கு பாஜக - ஆர்எஸ்எஸ் வெறுப்பு அரசியலே கார ணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மணிப்பூர் மாநிலத்தில், வன்முறைக் கும்பலால் பழங்குடி பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கும், வல்லுறவுக்கும் உள்ளாக்கப்பட்டதுடன் குற்றத்தை தடுக்க முயன்ற தந்தையும், சகோதரரும் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். எவரையும் பதைபதைக்கச் செய்யும் இந்தக் கொடூரம் காணொலியாக வெளியாகி காண்போரை மனம் கொந்தளிக்கச் செய்துள்ளது. இப்போது வரை குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியைப் பயன்படுத்தி வெறுப்பு அரசியலை வேகப்படுத்தும் பாஜகவிற்கு எதிராக அனைத்து மக்களும் கண்டனக் குரல் எழுப்ப வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது.
160க்கும் அதிகமானவர்கள் படுகொலை
மணிப்பூர் மாநிலத்தில் மே 3 அன்று வன்முறைகள் தொடங்கின. மே 4 அன்றே பல்வேறு இடங்களில் பழங்குடி மக்கள் மீதான தாக்குதல்கள், பாலியல் வல்லு றவு மற்றும் கும்பல் கொலைகளும் நடந் தேறியுள்ளன. இதுவரை அந்த மாநிலத்தில் 160க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆயிரக்கணக் கானோர் படுகாயமுற்றுள்ளனர்; சுமார் 50 ஆயிரம் பேர் உள்நாட்டிலேயே அகதிகளாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 350 தேவாலயங்களும், சுமார் 20 கோயில்களும் பிற வழிபாட்டுத்தலங்களும் சூறையாடப்பட்டுள்ளன. இந்தக் கொடூ ரங்களை கண்டித்து பிரதமர் மோடி வாய் திறக்க வேண்டும், பாஜக மாநில அரசு பதவி விலக வேண்டும்; உடனடியாக அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சிகள் பலமுறை வலியுறுத்தின.
இரண்டரை மாதங்களுக்குப் பின் வாய் திறந்த பிரதமர்
ஆனால், பிரதமர் மோடியோ கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி னார். மணிப்பூரின் மக்கள் பிரதிநிதிகள் அவரை சந்திக்க நேரம் கேட்டு காத்திருந்த போதிலும், அவர்களைச் சந்திப்பதை தவிர்த்துவிட்டு அமெரிக்காவிற்கு பயணப் பட்டார்; வந்தே பாரத் ரயில்களுக்கு கொடி யசைத்து பகட்டான விழாக்களை நடத்தி னார். அதன் பிறகு பிரான்ஸ் நாட்டிற்கு பறந்துவிட்டார். இப்போது நாடாளுமன்றக் கூட்டம் துவங்கியுள்ள சூழலில் மணிப்பூரின் கொடூர நிலைமை பற்றிய வீடியோ வெளி யாகியது. இந்த சூழலிலேயே இரண்டரை மாதங்களுக்குப் பின் பிரதமர் வாய் திறந்து பேசியிருக்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் காணொலி (மணிப்பூர் பாலியல் வன் கொடுமை) கடந்த மே மாதம் 4 அன்றே பதிவானதாகும். இந்த சம்பவம் தொடர்பாக மே 18 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் குற்ற மிழைத்த எவருடைய பெயரும் அதில் இடம் பெறவில்லை. அங்கு நடைபெற்றுவரும் கொடூரங்கள் எதுவும் அரசு நிர்வாகத்திற்கு தெரியாமலில்லை. சூழலை விளக்கு வதற்காக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டி ருந்த மக்கள் பிரதிநிதிகளிடமும் அவர் பேச மறுத்துவிட்டார்.
பாஜக-ஆர்எஸ்எஸ் வெறுப்பு அரசியல்
சிபிஐ(எம்) உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் நாடாளுமன்ற உறுப் பினர்கள் நேரில் சென்று மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் உண்மை நிலையை விசாரித்து வெளிப்படுத்தினார் கள். அதில் பாஜக-ஆர்எஸ்எஸ் வெறுப்பு அரசியல் திட்டம் எந்த அளவுக்கு மக்களை மோதிக்கொள்ளச் செய்திருக்கிறது என்பது வெளிப்படையாக தெரியவந்தது. எல்லா வற்றையும் பாராமுகமாக கடந்து சென்ற பிரதமர், மூடி மறைக்க முயன்ற கொடூரத்தில் ஒரு சிறு பகுதி அம்பலப்பட்டுவிட்டதே என்ற அதிர்ச்சியில்தான் இப்போது பேசியுள்ளார். இதன் பின்னரும் கூட மணிப்பூர் மக்க ளுக்கு அமைதியான சூழலை உறுதி செய்து, வாழ்வாதாரங்களை மறுகட்டமை க்க எந்த உருப்படியான முயற்சியும் பாஜக - ஆர்எஸ்எஸ் அரசால் துவக்கப்படவில்லை.
பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும்
மணிப்பூரில் உள்ள மாநில பாஜக அரசு, பதவியில் நீடித்திருக்க எள்ளளவும் அரு கதையாற்றதாகும். இதுவரை நடந்துள்ள கொடூரங்களுக்கு மணிப்பூர் முதலமைச்ச ரும், பிரதமர் மோடியுமே பொறுப்பேற்க வேண்டும். இப்படிப்பட்ட இரட்டை எஞ்சின் கொடூரத்திற்கு எதிராக ஜனநாயக எண் ணம் கொண்ட அனைவரும் குரல்கொடுக்க வேண்டுமென சிபிஐ(எம்) மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது. ஜனநாயக இயக்கங் கள் முன்னெடுக்கும் போராட்டங்களை ஆதரித்து, வெறுப்பு அரசியலுக்கு எதிரான உறுதியை வெளிப்படுத்த வேண்டுமென அறைகூவி அழைக்கிறோம்.