states

img

வெயிலின் தாக்கத்தால் மகாராஷ்டிராவில் 25 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தகவல்  

வெயிலின் தாக்கத்தால் மகாராஷ்டிராவில் நடப்பு ஆண்டில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.  

நாட்டில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதேபோல் துலே, நந்தூர்பர், ஜர்காவ் மற்றும் அகமது நகர், நாக்பூர் மற்றும் வடக்கு மத்திய மராட்டிய பகுதிகளில் நாளை முதல் 6 ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

இந்நிலையில் அதிக வெப்பம் காரணமாக மாநிலத்தில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளது.  

மேலும் சுகாதாரத்துறை அளித்த தரவுகளின்படி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பு ஆண்டில் அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.  

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தலைவர் டாக்டர்.ஜெயந்தா சர்க்கார் தெரிவிக்கையில், வடமேற்கு பகுதியிலிருந்து வறண்ட காற்று வீசுவதால் 40 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பம் அதிகரிக்கக்கூடும். எனவே பொதுமக்கள் வெயிலில் நடமாட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.  

கடந்த 2016 ஆம் ஆண்டில் வெயில் தாக்கத்தின் காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.