states

img

போர்வெறி பிடித்த அமெரிக்கா சமாதானப் புறா ஆக முடியாது

பெங்களூரு, ஜன. 19 - முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத் திற்கு எதிராக வர்க்கச் சார்புடைய  சர்வதேச தொழிற்சங்க இயக்கத்திற்கு இந்திய தொழி லாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட ஆதரவுக்கு சிஐடியுவின் போர்க்குணமிக்க போராட்டங் கள் உறுதுணையாக உள்ளன என்று உலக  தொழிற்சங்க சம்மேளன பொதுச் செயலா ளர் பாம்பிஸ் கிரித்சிஸ் கூறினார். பெங்களூரில் நடைபெற்று வரும் சிஐடியு 17ஆவது அகில இந்திய மாநாட்டில் உலக தொழிற்சங்க சம்மேளன பொதுச் செய லாளர் பாம்பிஸ் கிரித்சிஸ் பங்கேற்றுள்ளார். 130 நாடுகளில் உள்ள தொழிற்சங்கங் களின் கூட்டமைப்பான உலக சம்மேள னத்தின் சார்பில், இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திக ழும் சிஐடியுவின் மாநாட்டிற்கு உலக தொழி லாளி வர்க்கத்தின் வாழ்த்துக்களை உரித்தாக்குவதாக, தமது உரையின்போது அவர் கூறினார்.

“சிஐடியு என்பது உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் ஒரு மதிப்புமிக்க பெரிய தொழிற்சங்கமாகும். அதிக எண்ணிக்கை யிலான உறுப்பினர்களைக் கொண்டிருப்ப தால் மட்டுமல்ல, இந்திய வரலாற்றில் ஏகாதி பத்தியத்திற்கு எதிராகவும் முதலாளித்துவ தாக்குதலுக்கு எதிராகவும் இடைவிடாத, போர்க்குணமிக்க வலுவான போராட்டங் களின் வரலாற்றைக் கொண்ட தொழிற்சங்கம் சிஐடியு என்பதால்தான் உலக சம்மேள னத்திற்கு இந்த இயக்கம் உத்வேகம் அளிக்கிறது” என்று பாம்பிஸ், தமது வாழ்த்துரையில் குறிப்பிட்டார். மாநாட்டில் மேலும் அவர் பேசியதாவது: “தற்போதைய உலகில் அரசியல், பொரு ளாதார மற்றும் ராணுவ ரீதியான கொடிய தாக்குதல்களை முதலாளித்துவம் தீவிரப் படுத்தியுள்ளது. நமது புவிக்கோளத்தின் பொருளாதார வளங்கள் அனைத்தையும் ஒட்டச்சுரண்டவும் முழுமையாக கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவரவும் முதலாளித்து வம் முழுவீச்சிலான தாக்குதலில் ஈடு பட்டுள்ளது. அதன் ஒரு பகுதிதான் ஏகாதி பத்தியம் நடத்துகிற போர்கள்.

சமாதானப் புறாக்கள் போல

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் துவங்கிய பிறகு, இந்த நிகழ்வை சுதந்திரத் திற்கும் எதேச்சதிகாரத்திற்கும் இடையி லான போராக சித்தரிப்பதற்கு அமெரிக்கா வும் அதன் தலைமையிலான நேட்டோ அமைப்பும் இவர்களின் கூட்டாளியான ஐரோப்பிய ஒன்றியமும் முயற்சிக்கின்றன. இப்படிக் கூறுவதன் மூலம் ரஷ்யா - உக்ரைன் இடையிலான தற்போதைய போரின் பின்ன ணியில் இருக்கிற தங்களது முழுமையான கிரிமினல் தனமான பங்கினை மூடி மறைக்க இவர்கள் முயற்சிக்கிறார்கள். இவர்கள் எத்தனை எத்தனை ரத்தம் தோய்ந்த போர்களை நடத்தியவர்கள்; எத்த னை நாடுகளில் ஊடுருவியவர்கள்! பாலஸ் தீனம், சிரியா, இராக், ஆப்கானிஸ்தான், லிபியா, யுகோஸ்லேவியா, சைப்ரஸ்  உள்ளிட்ட பல நாடுகளில் தங்களது ஏகாதி பத்திய நலன்களை நிலைநாட்டுவதற்காக இவர்கள் நடத்திய நாசகரமான யுத்தங்கள் மிகவும் கொடியவை. அதுமட்டுமல்ல, கியூபா முதல் வெனிசுலா வரை  இவர்கள் ஏவியுள்ள தடைகளும் பொருளாதார யுத்தங்களும் தான் எத்தனை எத்தனை! இப்போது ரஷ்யா - உக்ரைன் விவ காரத்தில் இவர்கள் தங்களை சமாதானப் புறாக்களைப் போல காட்டிக்கொள்ள முயல்கிறார்கள். மேலும் மேலும் ராணு வத்தை கட்டமைப்பவர்கள்; உலகின் அனைத்து வகையான அதிதீவிர வலதுசாரி  தேசிய வெறிசக்திகள் மற்றும் பாசிச சக்தி களுக்கு முழுமையாக துணைநிற்பவர்கள் எப்படி உலகின் அமைதியை - உலக சமாதானத்தை பாதுகாக்க முடியும்?

யுத்தங்களால் சமாதானம் ஏற்படாது

உலக சமாதானம் என்பது பொருளா தாரத் தடைகளால், மருத்துவ உபகரணங் களுக்கு விதிக்கப்படும் தடைகளால், பொரு ளாதார யுத்தங்களால் உருவாக்கப்பட முடியாதது.  உலக தொழிற்சங்க சம்மேளனம் அமைதிக்காகப் போராடுகிறது. போர்களை முடிவுக்கு கொண்டுவருவதற்காகப் போராடு கிறது. ஏகாதிபத்திய யுத்தங்களையும் ஊடு ருவல்களையும் முடிவுக்கு கொண்டு வருவதற்காகப் போராடுகிறது. உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் நேட்டோ ராணுவக் கூட்டணியை கலைக்க வேண்டும் என்று போராடுகிறது. அனைத்து ராணுவக் கூட்டணிகளும் கலைக்கப்பட வேண்டும்; அணுஆயுதங்கள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடுகிறது. உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி மேலும் மேலும் ஆழமாகிக் கொண்டிருக் கிறது. இது, உலகெங்கிலும் ஜனநாயகத்தை அழித்தொழிக்கவும்; தொழிற்சங்க உரிமை களைப் பறிக்கவும் இட்டுச் செல்கிறது; சமூக ஏற்றத்தாழ்வுகளும் வறுமையும் கொடிய சுரண்டலும் மிகப்பெரும் அளவுக்கு விரிவடைகிறது. உலகம் முழுவதும் அனைத்து அத்தியா வசியப் பொருட்களின் விலைகளும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூர்மை யாக அதிகரித்து வருகின்றன; உழைப்பாளி மக்களின் குடும்பங்களது வாழ்க்கைத் தரம்  நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. அதே வேளையில், பெரும் கார்ப்பரேட் நிறுவனங் கள் மற்றும் ஏகபோக முதலாளிகளின் செல்வக் குவிப்பும் லாபக்குவிப்பும் இதுவரை வர லாற்றில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது. 

சமரசமில்லா ஒரே பாதை

உலகம் முழுவதிலும் உள்ள தொழி லாளர்கள், முதலாளித்துவத்தின் இத்தகைய தாக்குதலுக்கு பணிய மறுக்கிறார்கள்; ஏகாதிபத்திய யுத்தங்களுக்கு தலை வணங்க மறுக்கிறார்கள்; பல நாடுகளில் குறிப்பிடத்தக்க எழுச்சிமிக்கப் போராட்டங் கள், வேலைநிறுத்தங்கள், தொழிலாளர் அணிவகுப்புகள் நடந்த வண்ணம் உள்ளன. தொழிற்சங்க உரிமைகளைப் பாது காக்க, தொழிலாளர்களின் கூட்டுபேர சக்தி யைப் பாதுகாக்க, நடக்கும் இத்தகைய போர்க்குணமிக்க கிளர்ச்சிகளில், உலக  தொழிற்சங்க சம்மேளனத்தின் உறுப்பினர் களாக உள்ள தொழிற்சங்கங்கள் முன்னணி யில் நிற்கின்றன.  இந்தப் போராட்டங்களை ஒடுக்கு வதற்கு கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் முதலாளித்துவ அரசுகள் முயற்சிக்கின்றன. தொழிற்சங்கங்களை முடக்கவும், சீர்குலைக்கவும், விலைபேசவும் கூட சூழ்ச்சி செய்கின்றன. ஆனால் அவை அனைத்தையும் மீறி உலகத் தொழிற்சங்க இயக்கம், ஏகபோக முதலாளித்துவத்தின் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது. உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் ஆயுதம் பரஸ்பரம் ஆதரவும் சர்வதேசிய வாதமுமே ஆகும். ஆளும் வர்க்க ஆட்சி யாளர்களின் ஒடுக்குமுறைகளுடன் ஒரு போதும் சமரசம் செய்துகொள்ளாத தொழி லாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கிற ஒரே பாதை போராட்டப்பாதையே ஆகும். இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் சமரச மற்றப் போராட்டங்கள் அதற்கான உத்வேகத்தை உலகத் தொழிற்சங்க இயக்கத்திற்கு அளிக்கின்றன. முத லாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கு எதி ராக, ஏகாதிபத்திய யுத்தங்களுக்கு எதிராக - சுரண்டல் ஒழிக்கப்பட்ட உலகைப் படைக்க உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையை வலுவாகக் கட்டுவோம். இவ்வாறு பாம்பிஸ் தமது உரையில் கூறினார்.