பெங்களூரு, அக். 21 - பெங்களூருவில், திருவள்ளுவர் சிலைப் பீடத்தை பாஜக நிர்வாகிகள் இடித்துத் தள்ளி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரு நகரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலையை கடந்த 2009 ஆகஸ்ட் 9-ஆம் தேதி அப்போது முதல்வராக இருந்த பி.எஸ். எடியூரப்பா தலைமையில் நடந்த பிரம்மாண்ட விழாவில் தமிழக முதல்வராக இருந்த மு.கருணாநிதி திறந்து வைத்தார். இவ்வாறு பெங் களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டு 13 ஆண்டு்கள் ஆகிவிட்ட நிலையில், சிலை அமைந்துள்ள பூங்கா போதிய பராமரிப்பு இல்லாமல் கிடந்தது. இதையடுத்து, திருவள்ளுவர் சிலை உள்ள பூங்காவை நவீனமய மாக புனரமைக்க இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த பிப்ரவரி மாதம் சிவாஜி நகர் சட்டமன்ற உறுப்பினர் ரிஸ்வான் அர்சத் மூலம் பூமி பூஜை நடைபெற்றது.
திருவள்ளு வர் சிலையை சுற்றி பிரம்மாண்ட பீடம் அமைக்கும் பணியும் நடைபெற்று வரு கிறது. இந்த பணியின்போது, திரு வள்ளுவர் சிலையின் கீழே எடியூரப்பா, கருணாநிதி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்த கல்வெட்டு மறைக்கப் பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனைக் காரணமாகக் காட்டி, அங்கு வந்த பாஜக நிர்வாகிகள் சிலர் ஜேசிபி வாகனம் மூலம் திருவள்ளுவர் சிலையைச் சுற்றி அமைக்கப்பட்டு இருந்த பீடத்தை இடித்துத் தள்ளி யுள்ளனர். சட்டவிரோதமாக அரசு அதி காரிகளின் அனுமதி எதுவும் இல்லா மல் இவ்வாறு செய்துள்ளனர். இந்த தகவலை அறிந்ததும், திரு வள்ளுவர் சிலை எதிரே கூடிய காங்கி ரஸ் கட்சியினர் பாஜகவினரைக் கண்டி த்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவாஜி நகர் சட்டமன்ற உறுப்பினர் ரிஸ்வான் அர்சத், புலிகேசி நகர் சட்டமன்ற உறுப் பினர் அகண்ட சீனிவாச மூர்த்தி, சர்வக்னா நகர் சட்டமன்ற உறுப்பி னர் கே.ஜே. ஜார்ஜ், காந்திநகர் சட்டமன்ற உறுப்பினர் தினேஷ் குண்டு ராவ் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத் தில் கலந்து கொண்டுள்ளனர். சமூக ஆர்வலர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர் களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசுக்கு எதிராக கண்டனங் களை முழங்கியுள்ளனர். வளர்ச்சி என்ற தத்துவம் தெரியாத பாஜக அரசு, வெறுப்பு அரசியலை கையில் எடுத்து மக்களை பிளவு படுத்தி வருவதாக சிவாஜி நகர் சட்ட மன்ற உறுப்பினர் ரிஸ்வான் குற்றம் சாட்டியுள்ளார்.