மேற்கு வங்கத்தில் சிபிஎம் போராட்டம் வெற்றி
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு ஸ்மார்ட் மீட்டர் நிறுவலுக்கான தனியார் துறை திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக ஸ்மார்ட் மீட்டர் நிறுவலுக்கான தனியார் துறை திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது திரிணாமுல் காங்கிரஸ் அரசு.