states

img

காங்கிரஸ் எம்பிக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக தலைவர் ஈஸ்வரப்பா

சமீபத்தில் காங்கிரஸ் எம்பி டி.கே.சுரேஷ், “தென் மாநிலங்களின் வரி வருவாயை இந்தி பேசும்  மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தாரை வார்த்து வருகி றது. இதே நிலைமை தொடர்ந்  தால் தென்னிந்திய மாநிலங் கள் தனிநாடு கோரும் நிலை மை உருவாகும்” என கூறி யிருந்தார். இந்த கருத்தை பாஜக மக்களவை தேர்தலுக்  கான அரசியல் ஆதாய பொரு ளாக மாற்ற நினைத்த நிலை யில், காங்கிரஸ் கட்சி டி.கே. சுரேஷின் கருத்திற்கு கண்ட னம் தெரிவித்து, அவரை கண்டித்தது.

கடந்த வாரமே இந்த  பிரச்சனை ஓய்ந்த நிலையில்,  பாஜக மூத்த தலைவரும், சர்ச்சைக்கு பெயர் பெற்றவரு மான ஈஸ்வரப்பா,”டி.கே. சுரேஷ் எம்.பி பிரிவினை வாதம் பேசுகிறார். அவரை  சுட்டுக்கொலை செய்ய வேண்  டும்” எனக் கூறி அணைந்து கொண்டிருந்த தீயில் மேலும் எண்ணெய் ஊற்றினார்.

டி.கே.சுரேஷ் பதிலடி
ஈஸ்வரப்பா மிரட்டல் குறித்து  கருத்து தெரிவித்த டி.கே. சுரேஷ் எம்.பி, “என்னை சுட்டுக் கொல்வதாக பேசி யிருப்பதால் பாஜக தலைமை  ஈஸ்வரப்பாவுக்கு ஆளுநர் பதவி தரக்கூடும். நான் யாரை யுமே தூண்டிவிடப் போவ தில்லை. ஈஸ்வரப்பா வீட் டுக்கு நானே செல்கிறேன். அவருக்கு தைரியம் இருந் தால் என்னைச் சுட்டுக் கொல்  லட்டும். மகாத்மா காந்தியடி களை படுகொலை செய்தவர் களுக்கு, கர்நாடகாவுக்காக குரல் கொடுத்த என்னை படுகொலை செய்வது பெரிய  விஷயம் அல்ல” எனக் கூறி பதிலடி கொடுத்தார்.

துணை முதல்வர் எச்சரிக்கை
டி.கே.சுரேஷின் சகோதர ரும், கர்நாடகா துணை முதல்  வருமான டி.கே சிவ குமார்,”தைரியம் இருந்தால் சுரேஷை ஈஸ்வரப்பா சுட்  டுக்கொல்லட்டுமே. இதற் கெல்லாம் அஞ்சுகிறவர்கள் நாங்கள் அல்ல. எங்கள் உடம்  பில் எதையும் எதிர்கொள்ளும்  தைரியம் உள்ள ரத்தம்தான் ஓடுகிறது. ஈஸ்வரப்பாவுக்கு சரியான பதிலடி மீண்டும் தரு வோம்” என்று எச்சரித்துள்ளார்.

பெங்களூரில் பதற்றம்
பாஜக தலைவர் ஈஸ்வ ரப்பாவின் சர்ச்சை பேச்சால் டி.கே.சுரேஷின் சொந்த மக்க ளவை தொகுதியான பெங்க ளூரு புறநகர் பகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் போஸ்டர் யுத்தத்துடன் போராட்டம் நடத்த குவிந்துள்  ளதால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.