states

img

விவசாயிகள் போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆதரவு

டிசம்பர் 8 – பாரத் பந்த் அன்று விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பிஎஸ்என்எல் ஊழியர்கள் மதிய இடைவேளையின் போது ஆர்ப்பாட்டம் மேற்கொண்டும், கருப்புப் பட்டைகள் அணிந்தும் ஆதரவைத் தெரிவிப்பார்கள்.

இது தொடர்பாக பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அபிமன்யு கூறியிருப்பதாவது:

பிஎஸ்என்எல் எம்ப்ளாயிஸ் யூனியன், போராடும் விவசாய அமைப்புகளின் கோரிக்கைகளை முழுமையாக ஆதரிக்கிறது. அவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே டிசம்பர் 3 அன்று நாடு முழுதும் மதிய இடைவேளையின்போது ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டன. இப்போது பாரத் பந்த்தையும் முழுமையாக ஆதரிக்கின்றன. அன்றைய தினமும் மதிய இடைவேளையின்போது ஆர்ப்பாட்டங்கள் மேற்கோள்வார்கள். மேலும் பந்த்தை ஆதரித்து கருப்புப் பட்டை அணிந்தும் பணிபுரிவார்கள்.

இவ்வாறு அபிமன்யு தெரிவித்துள்ளார்.

(ந.நி.)

 

 

;