புதுச்சேரி,மார்ச்.13- புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் திங்களன்று தாக்கல் செய்த 2023-24 ஆம் ஆண்டிற் கான பட்ஜெட்டில் சிறப்புஉட்கூறு நிதியாக ரூ.441கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள இதர அம்சங்கள் வருமாறு; அட்டவணையின மற்றும் பழங்குடி இன மக்களின் சமூக பொரு ளாதார முன்னேற்றத்திற்காக இந்தாண்டு சிறப்புக்கூறு நிதியாக ரூ.441 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தலித் மற்றும் பழங்குடியினர் மக்களுக் கான அனைத்து நலத்திட்டங்கள் பெரு வதற்கான வருவாய் உச்சவரம்பை ரூ.8லட்சமாக உயர்த்ப்படுள்ளது. ஆதி திராவிடர்,பழங்குடியின மக்களின் உயர் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.3லட்சம் நிதியுதவி வழங்கப்படும். புதுச்சேரி அரசு பேருந்துகளில் ஆதிதிராவிடர் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப் படும். கலப்பு திருமணம் (சாதி மறுப்பு) செய்பவர்களுக்கு வழங்கப் படும் ஊக்கத்தொகை ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து ரூ.3லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் முதல்வர் ரங்க சாமி அறிவித்துள்ளார். நில மற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடி யினத்தவர்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்கப்படும். சிவப்பு அட்டைதாரர்களுக்கு பிரிமீயம் தொகை
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க ரூ.100 கோடிக்கு மேல் முதலீட்டில் தொழில் தொடங்கும் நிறுவனங்களை ஊக்கு விக்க நிலம், கட்டடங்கள், இயந்தி ரங்களின் மதிப்பீட்டுக்கு தொழில் தொடங்கப்பட்ட தேதியிலிருந்து முதல் ஐந்து ஆண்டு காலத்துக்கு ஆண்டுக்கு 1 விழுக்காடு மானியம் வீதம் மொத்தம் 5 விழுக்காடு மானி யம் தர உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் விபத்து காப்பீட்டு திட்டத்தில் அனைத்து சிவப்பு ரேசன் அட்டைத்தாரர்களில் நபர் ஒரு வருக்கு ஆண்டுக்கு செலுத்த வேண்டிய பிரிமீயம் தொகையை அரசு செலுத்தும்.
நினைவு அருங்காட்சியகங்கள்
நடப்பாண்டில் மகளிருக்கு சிறப்பு நிதியத்துக்கு ரூ. 1332 கோடியும், பசுமை சிறப்பு நிதியத்திற்கு ரூ. 555ம், இளையோருக்கான சிறப்பு நிதியத்திற்கு ரூ.504 கோடியும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறப்பு நிதியங்களுக்கு ரூ. 2391 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாரதியார் நினைவு அருங்காட்சி யகம், பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம், மகாகவி பாரதியார் நினைவு மண்டபம், கீழூர் நினைவுச்சின்னம், மக்கள் தலைவர் சுப்பையா நினைவகம் ஆகியவை சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் துவங்கப்படும்.
உலக தமிழ் மாநாடு
புதுச்சேரியில் உலகத்தமிழ் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்ச்சிறகம் மீண்டும் செயல்படுத்தப் டும். விரைவில் இலவச மடிக்கணினி தரப்படும். பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தினை மேம்படுத்தும் பொருட்டு மாலையில் சிறுதானிய சிற்றுண்டி தரப்படும். கல்வித்தரத்தை மேம்படுத்த 6 முதல் 12ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும். தீயணைப்புத்துறையில் 54 மீட்டர் உயரம் செல்லும் அதிநவீன ஸ்கை லிப்ட் வாங்கப்படும். தெருவிளக்குகள் அனைத்தும் எல்இடி விளக்குகளாக ரூ. 4.5 கோடியில் மாற்றப்படும். புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டி லுள்ள அனைத்து கோயில் திருவுருவச் சிலைகள், தங்கம், வெள்ளி ஆப ரணங்கள், இதர அசையும் சொத்துகள் உட்பட அனைத்து ஆவ ணங்களும் டிஜிட்டலாக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு இணையத்தில் பதிவேற்றப்படும். இவ்வாறு முதல்வர் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.