புதுச்சேரி, மார்ச் 6- மகளிர் தினத்தையொட்டி புதுச்சேரியில் கருத்தரங்கம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தை யொட்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மதகடிப்பட்டில் மருத்துவ முகாம் மற்றும் சிறப்புக் கருத்தரங்கம் கொம்யூன் தலைவர் சிவசங்கரி தலைமையில் நடைபெற்றது. “உழைக்கும் பெண்கள் சந்திக்கும் சவால்கள்” என்ற தலைப்பில், சிஐடியு மாநி லத் தலைவர் என்.பிரபுராஜ், “இன்றைய சமூகத்தில் பெண்களின் நிலை” என்ற தலைப்பில், காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் வேலூர் கோட்ட துணைத் தலைவர் ெஜயஸ்ரீ, “பெண்களின் போராட்ட அனுபவங்கள்” என்ற தலைப்பில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சத்தியா ஆகி யோர் பேசினர். முன்னதாக ஸ்ரீ லட்சுமிநாராயணா மருத்துவக் கல்லூரி, மருத்துவமணை சார்பில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை சங்கத்தின் மாநிலச் செயலாளர் இளவரசி துவக்கி வைத்தார். சங்க நிர்வாகிகள் உமாசாந்தி, புவனேஸ்வரி, தவமணி, லாவண்யா, பூமாதேவி, அமிர்த வல்லி, செல்வசுந்தரி, கஜோல்,திரிபுரசுந்தரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.