புதுச்சேரி, மார்ச் 3- புதுவையில் கனமழையால் பாதிக்கப்பட்ட 7 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.7 கோடி நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுவையில் கடந்த ஆண்டு இறுதியில் வரலாறு காணாத மழை பெய்தது. இத னால் விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். இதை யடுத்து அரசு சிவப்பு ரேஷன் கார்டுதாரர்க ளுக்கு 5 ஆயிரம் ரூபாயும், மஞ்சள் கார்டு தாரர்களுக்கு 4,500 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்பட்டது. சாகுபடி செய்த பயிர்களுக்கு ஹெக்டே ருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். இப்போது அந்த நிவாரணம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விவ சாயிகளின் வங்கிக் கணக்கில் இந்த தொகை செலுத்தப்பட உள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை யின் போது அதிக கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்களுக்கான நிவாரணத் தொகை ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என முதல்மைச்சர் அறிவித்தார். அதன்படி விவசாயிகளுக்கு நிவாரண தொகை ரூ.7 கோடியே 10 லட்சத்து 57 ஆயிரத்து 600 வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் புதுவை, காரைக்கால், ஏனாம் பகுதிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 16 விவசாயிகள் பயனடைவர். கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நிவாரணத் தொகை புதுவையை சேர்ந்த 6 ஆயிரத்து 54 விவசாயிகளுக்கு ரூ.5 கோடியே 97 லட்சத்து 11 ஆயிரத்து 200, காரைக்காலை சேர்ந்த 731 விவசாயிகளுக்கு ரூ.97 லட்சத்து 55 ஆயிரத்து 800, ஏனாமை சேர்ந்த 231 விவசாயிகளுக்கு ரூ.15 லட்சத்து 90 ஆயிரத்து 600 விரைவில் வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.