புதுச்சேரி, மார்ச் 7- லாஸ்பேட்டை தொழில்நுட்ப பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள தொழில்நுட்ப பள்ளி 1858ஆம் ஆண்டு பிரெஞ்சு அரசால் துவங்கப்பட்டது. இந்த தொழில்நுட்ப மேல்நிலைப் பள்ளியில் 9க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் நடைபெற்று வந்தது. தொழில்நுட்ப கல்விக்கு என்று தனியாக தமிழகத்தில் கூட இப்படி ஒரு அரசு பள்ளி இல்லை. புதுச்சேரியில் மட்டும்தான் தொழில்நுட்ப பள்ளி இயங்கி வரு கிறது. இப்படி பல ஆண்டு பழமை யும் பெருமையும் வாய்ந்த இப்பள்ளி யில் தற்போது வெறும் 4 பாடப்பிரிவு களுடன் 200க்கும் மேற்பட்ட மாண வர்கள் பயில்கின்றனர். அதுவும் விரை வில் மூடப்போவதாக தகவல்கள் வெளியானது. இது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியை பள்ளியிலே கற்றுக் கொடுக்கும் வகையில் மிகச்சிறப்பாக இயங்கி வந்த இப்பள்ளி சமீப கால மாக அடிப்படை வசதிகள் இன்றி, ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. 2012ஆம் ஆண்டு தானே புயலில் சேத மடைந்த பல வகுப்பறைகள் இன்னும் சீரமைக்கப்படவில்லை. புதுச்சேரிக்கு என்று தனி கல்வி வாரியம் இல்லாததால், தமிழக கல்வி வாரியத்தின் பாடத்திட்டம் மாறும்போது, மாற்று வழியைக் கண்டறிந்து பள்ளியை இயக்குவதற்கு மாறாக அரசு ஒவ்வொரு பாடப்பிரிவு களை குறைத்து வருவது பள்ளிக்கு மூடு விழா காண்பதகவே இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச தலைவர் nஜயப்பிரகாஷ், செயலாளர் பிரவீன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர். கொரோனா காலத்திற்கு பிறகு அரசு பள்ளியை நோக்கி மாணவர்கள் வரும் சூழலில் இப்படி பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் அடிப்படை வசதிகளை சீரமைக்காமல் இருப்பதை இந்திய மாணவர் சங்கம் கல்வித்துறைக்கு சுட்டிக்காட்டி உள்ளது. எனவே புதுச்சேரி அரசும் கல்வித்துறையும் உடனடியாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி, மூடப்பட்ட தொழில்நுட்ப பாடப்பிரிவு களை மீண்டும் துவங்கிட வேண்டும். மேலும் பள்ளியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களும் ஆசிரியர்களும் வலியுறுத்துகின்றனர்.