பஞ்சாப் மாநிலம் பதிண்டா அருகே உள்ள துங்வாலி கிரா மத்தைச் சேர்ந்த அரசு செவிலி யரான பியாந்த் கவுர் என்ற பெண், தலைமைக் காவலரான ஜக்மீத் சிங்கை காதலித்து வந்துள்ளார். இரு வரும் வேறு சமூகத்தைச் சேர்ந்த வர்கள் என்பதால் இவர்களது திரு மணத்திற்கு பியாந்த் கவுரின் குடும் பத்தினர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் நீதிமன்றம் வரை போராடி 4 வருடங்களுக்கு முன் ஜக்மீத் சிங்கை திருமணம் செய்துகொண்டார் பியாந்த் கவுர். இந்நிலையில் சமீ பத்தில் ஜக்மீத் சிங்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் பியாந்த் கவுர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், ஞாயிறன்று தனது மனைவியை அழைத்துச் செல்ல ஜக்மீத் சிங் துங்வாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென் றுள்ளார். அப்பொழுது தனது சகோ தரியை சாதி மாறி காதல் திருமணம் செய்த காரணம் தொடர்பாக பியாந்த் கவுரின் சகோதரருக்கும், ஜக்மீத் சிங்கிற்கும் வாக்குவாதம் ஏற்பட் டது. வாக்குவாதம் ஒருகட்டத்தில் கை கலப்பாக மாறி பியாந்த் கவுரின் சகோ தரர் அருகில் இருந்த கோடாரியை வைத்து ஜக்மீத் சிங்கை சரமாரி யாக வெட்டியுள்ளார். தடுக்க வந்த பியாந்த் கவுரையும் அவரது சகோ தரர் கோடாரியால் வெட்டினார்.
இந்த சம்பவத்தில் பியாந்த் கவுர் - ஜக்மீத் சிங் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவ லறிந்த நாத்தனா நகர போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்த னர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள பியாந்த் கவுரின் சகோதரரை தேடி வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் சாதி ஆணவக்கொலைகள் அவ்வள வாக அரங்கேறாத நிலையில், பதிண்டா இரட்டைக்கொலை மாநி லம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.ஜக்மீத் சிங்கை சரமாரி யாக வெட்டியுள்ளார். தடுக்க வந்த பியாந்த் கவுரையும் அவரது சகோ தரர் கோடாரியால் வெட்டினார்.