states

பலாத்கார குற்றவாளி “எஸ்கேப்”

பஞ்சாப் மாநிலம் லூதியானா போலீசா ரால் 3 ஆண்டுகாலமாக தேடப்பட்டு வந்த பாலியல் பலாத்கார குற்றவாளி அமந்தீப் சிங், கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி  பஹ்ரைன் நாட்டில் இருந்து தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரை யிறங்கினார். அவருக்கு எதிராக ஏற்கனவே “லுக் அவுட்” நோட்டீஸ் அறிவிக்கப்பட்ட நிலையில், அமந்தீப் சிங்கின் தில்லி வருகை குறித்து மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்கு  (சிஐஎஸ்எப்) ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விமானத்தில் இறங்கிவந்த அமந்தீப் சிங்கை உடனடியாக சுற்றிவளைத்து  பிடித்தனர். சிஐஎஸ்எப் காவலரின் பாது காப்பில் அவர் விமான நிலைய பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தார். சிஐஎஸ்எப் காவலர் அங்குள்ள கழிவறைக்கு சென்று வருவ தற்குள் விமான நிலையத்தின் வருகைப் பிரிவு  கவுண்டர் வழியாக அமந்தீப் சிங் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து தில்லி விமான நிலைய  போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். 

தப்பியோடிய அமந்தீப் சிங் மீது கடந்த 2020இல் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு  செய்யப்பட்ட பொழுது வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார். 3 வருடம் கழித்து தற்போது  அமந்தீப் சிங் இந்தியா வந்துள்ள நிலையில்,  அவரை கைது செய்து பஞ்சாப் போலீசாரிடம்  ஒப்படைக்காமல் சிஐஎஸ்எப் போலீசார் அவரை தப்ப விட்டுள்ளனர். இதனால் சிஐஎஸ்எப் படைக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகிறது.