states

img

சிறுவர்களைத் துப்பாக்கியால் சுட்ட பீகார் பாஜக அமைச்சரின் மகன்!

சம்பரன், ஜன.24- பீகார் மாநில பாஜக அமைச்சரின் மகன், கிரிக்கெட் விளையாடிய சிறு வர்களை துப்பாக்கியால் சுட்ட சம்ப வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் நாராயண் பிரசாத். இவரது மகன் பப்லு குமார். இவர்களுக்கு சொந்தமாக பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத் தில் உள்ள ஹர்டியா கிராமத்தில் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் உள் ளூர் சிறுவர்கள் கிரிக்கெட் விளை யாடி வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில், தங்கள் இடத்தில் சிறுவர்கள் விளையாடுவதா? என்று ஆத்திரம் அடைந்த அமைச்சர் நாரா யண் பிரசாத்தின் மகன் பப்லு குமார் அவர்களைக் கடுமையாகத் திட்டி யுள்ளார். இதில் பப்லு குமாருக்கும், சிறுவர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, சிறுவர்களை பய முறுத்துவதற்காக திடீரென துப்பாக் கியை எடுத்து பப்லு குமார் சுட்டுள் ளார்.

இதில், சிலர் காயம் அடைந் துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்திய நிலையில், தகவல றிந்த கிராம மக்கள், அமைச்சரின் வீட்டுக்குச் சென்று, அவரது காரை அடித்து நொறுக்கியதுடன், பப்லு வையும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. போலீசார் தற்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சிறுவர்கள் மீது அமைச்சரின் மகன் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் சக்தி சிங் கடும் கண்டனம் தெரிவித் துள்ளார். ‘பீகாரில் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லை. சட்டத்தை இயற்று பவர்களே சட்டத்தை மீறுகின்றனர். கிரிக்கெட் விளையாடும் குழந்தை களை தாக்க அமைச்சரின் மகனுக்கு யார் உரிமை தந்தது? சட்டத்தை இயற்றுபவர்கள் சட்டத்தை மீறும் போது மாநிலத்தில் யார் சட்டத்தை அமல்படுத்துவார்கள்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், “கிராம மக்கள் எனது நிலத்தை அபகரிக்க முயன்றனர். எனது குடும்பத்தினரை தாக்கினர். அதை தடுப்பதற்காகவே, எனது மகன் உரிமம் பெற்ற துப்பாக்கியுடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அவரையும் பொதுமக்கள் கற்க ளால் தாக்கியுள்ளனர். எனது வாக னத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்” அமைச்சர் நாராயண் பிரசாத், கிராம மக்கள் மீதே குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளார்.