ஒட்டு மொத்தத்தில் கடந்த 10 ஆண்டுகால மோடி அரசின் ஆட்சியில், ராணுவத்தில் அரசு அதிகாரத்துவத்தை எதிர்கொண்டு உண்மையைப் பேசுகின்ற திறன் இல்லாமல் போய்விட்டது. இது ராணுவத்தில் மட்டுமல்ல; இந்திய மீடியாக்களும் தங்களின் தார்மீக தைரியத்தை தொலைத்து விட்டன. மீடியாக்கள் அரசியல் தலைமை விரும்புகின்ற கதையாடல்களை அரசுடன் இணைந்தே பரப்புகின்றன. அரசு ராணுவம் மூலமாக மீடியாக்களுக்கு அழுத்தம் கொடுத்து அரசியல் தலைமை விரும்பும் பலனைப் பெறுவதற்காக மக்களின் கருத்தை வடிவமைக்க முடியும். ஒரே ஒரு தனிப்பட்ட மனிதரால் சடுதியில் முடிவுகள் எடுக்கப்படும் இன்றைய அரசியல் அமைப்பில், அதுவும் உண்மையான விமர்சனங்கள் ,எதிர்வினைகள் மிகவும் சுருங்கிப் போய்விட்ட காலத்தில், மீடியாக்களின் செயல்பாடுகள் பேரழிவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். மோடியின் அரசு ராணுவத்தை தனது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்வதும் அவ்வாறு தன்னை பயன்படுத்திக் கொள்ள ராணுவம் அவரை அனுமதிப்பதும் நாட்டின் ஜனநாயகத்திற்கு பேராபத்தாகும். மோடியின் அரசு ராணுவத்தை பயன்படுத்திக் கொள்வதும், அதை அனுமதிக்கும் ராணுவத் தளபதிகளின் விருப்பமும் நாட்டின் ஜனநாயகத் தன்மைக்கு ஆபத்து ஏற்படுத்தும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது. காலனித்துவ ஆட்சியில் இருந்து நாடு விடுதலை பெற்ற பின்னர், முதல் ஏழு தசாப்தங்களில் இந்தியா அடைந்த முன்னேற்றங்கள் அனைத்தையும் இது தலைகீழாக மாற்றி விடும் அபாயம் உண்டு. அதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.