மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறு வனங்கள் துறை அமைச்சர் நாராயண் ரனேவின் மகன் நிதேஷ் ரானே மீது 307 (கொலை முயற்சி), 120பி (குற்றச் சதி) வழக்குகள் உள்ள நிலையில், அவரை ஆஜர்படுத்துமாறு போலீசார் கூறியிருந்தனர். ஆனால், ‘‘எனது மகன் உள்ள இடத்தைக் கூற நான் என்ன முட்டாளா? இருக்குமிடம் தெரிந்தா லும் கூறமாட்டேன்’’ என்று நாராயண் ரானே பேசியிருந்தார். இதையடுத்து மும்பை போலீசார் தற்போது அமைச்சர் நாராயண் ரானேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.