states

img

மாநில அரசுகளுக்கு ரூ.1 லட்சம் கோடி கடன்

சென்னை, பிப்.28- அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடன் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரி வித்துள்ளார். சென்னையில் ஒன்றிய பட்ஜெட் தொடர்பான விளக்கக் கூட்டத்தில் நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய தாவது;  காகிதம் இல்லா முறையில் டிஜிட்டல் வகையில் ஒன்றிய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து மீளும் வகையில் ஒன்றிய பட்ஜெட் தயார் செய்யப்பட்டது.   மேலும், நிதியறிக்கையில், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லாமல் கடன் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்களின் மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டன.  கொரோனா தொற்றால் கல்வி கற்க முடியாமல் பாதிக்கப்பட்ட குழந்தை களுக்கு உதவும் வகையில், 200 டிவி சேனல்கள் உருவாக்கப்படுகின்றன. சோசலிச திட்டத்தின் மூலம் நமது நாட்டிலேயே அரசு முதலீட்டில் உற்பத்தி கடந்த 60 ஆண்டுகளாக நடந்துகொண்டிருந்தது. ஆனால், அது முறையாக தொடரப்படவில்லை. சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டன.  இவ்வாறு அவர் கூறினார்.