ஒன்றிய அமைச்சர் மகளுக்கு பாலியல் தொல்லை
பாஜக கூட்டணி ஆளும் மகா ராஷ்டிர மாநிலத்தின் ஜல் கான் மாவட்டத்தில் உள்ள முக்தாய் நகருக்கு அருகே கோதலி கிரா மத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி 28ஆம் தேதி யாத்திரை நடை பெற்றது. இந்த யாத்திரையில் ஒன்றிய இளைஞர் விவகாரம் மற்றும் விளை யாட்டுத் துறை இணையமைச்சர் ரக்சா காட்சேவின் மகள் தனது தோழிகளுடன் சென்றிருந்தார். அனைவரும் சிறுமி கள். அப்போது 6 இளைஞர்கள் ரக்சா காட்சேவின் மகள் மற்றும் அவரது தோழிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். யாத்திரை நடை பெற்ற பகுதி மக்கள் நடமாட்டம் அதிக முள்ள மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு உள்ள பகுதி ஆகும். ஆனாலும் ஒன்றிய அமைச்சர் மகள் யாத்திரையின் போது பாலியல் தொல்லைக்கு உள்ளானது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டு மல்லாமல், மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளது. புகார் இந்நிலையில், தனது மகள் பாலியல் வன்முறைக்கு ஆளானது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் ரக்சா காட்சே ஞாயி றன்று முக்தாய் நகர் காவல்நிலையத் தில் புகார் அளித்துள்ளார். பாலியல் துன்புறுத்தல் அளித்த 6 இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாவும், அவர்களை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றிய அமைச்சர் ரக்சா காட்சே பாஜகவைச் சேர்ந்தவர் என் பது குறிப்பிடத்தக்கது. கண்டனம் “மகாராஷ்டிராவில் ஒன்றிய அமைச்ச ரின் மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். அமைச்சர் மகளுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண குடும் பங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எப்படி இருக்கும்? என்று யோசித்து பாருங்கள்” என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத் பவார்) மாநி லத் தலைவர் ரோகிணி தெரிவித்துள்ளார்.