states

img

கொலீஜியம் பரிந்துரைத்தும் குஜராத் நீதிபதிகள் 4 பேரை இடமாற்றம் செய்யாத ஒன்றிய அரசு!

புதுதில்லி, நவ. 21 - கொலீஜியம் பரிந்துரைத்த 11 நீதிபதிகளில் 5 பேரை மட்டுமே ஒன்றிய அரசு இடமாற்றம் செய்துள்ளதாக வும், 6 பேர் இடமாற்றம் செய்யப் படவில்லை என்றும், அவர்களில் 4 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இது ‘நல்ல சமிக்ஞை அல்ல’ என்றும் குறிப்பிட்டுள்ளது. கொலீஜியம் உத்தரவை அமல்படுத்தாமல் இழுத்தடிக்கும் ஒன்றிய சட்டம் மற்றும் நீதி அமைச்ச கத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் பொதுநல வழக்குகளுக்கான இலாப நோக்கற்ற மையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.  அவற்றை நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல் மற்றும் சுதான்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு  விசாரித்து வருகிறது. இந்த வழக்கு கடந்த நவம்பர் 7 அன்று விசாரணைக்கு வந்தபோது, “கொலீஜியம் பரிந்துரைத்த பட்டிய லில் ஒரு சிலரை மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கும் ஒன்றிய அரசின் போக்கு  ஏற்புடையது அல்ல; இத்தகைய போக்கு நீதித்துறையில் ஒழுங்கின்மை யை ஏற்படுத்தும் என்பதால், இதனை ஒன்றிய அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால், அரசுக்கு விருப்பமில்லாத சில முடிவு களை நாங்கள் எடுக்க வேண்டியது வரும்” என்று நீதிபதிகள் எச்சரித்தி ருந்தனர்.

இந்நிலையில், திங்களன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், “எனது தகவலின்படி ஐந்து நீதிபதிகளுக்கு இடமாற்ற உத்த ரவு பிறப்பித்துள்ளீர்கள். ஆறு நீதி பதிகளுக்கு, நீங்கள் வழங்க வில்லை. அவர்களில் நான்கு பேர் குஜ ராத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த முறை யும், இது நல்ல சமிக்ஞையை அனுப்ப வில்லை என்று கூறியிருந்தேன். யாரையும் தேர்ந்தெடுத்து இடமாற்றம் செய்யக் கூடாது என்பதையும் கடந்தமுறை வலியுறுத்தினேன்” என்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், “பல்வேறு உயா்நீதி மன்றங்களின் நீதிபதிகள் நிய மனத்துக்காக அண்மையில் அனுப்பப்பட்ட பரிந்துரைகளில் 8 பெயர்களுக்கு ஒன்றிய அரசு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. இவா்களில் சிலர், நீதிபதிகளாக நிய மனம் பெற்றவா்களைவிட மூத்தவர்கள். இதன் காரணமாக நீதி பதிகளின் பணிமூப்பு பாதிக்கப்படு கிறது” என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து, ‘சட்டமன்றத் தேர்தல்கள் காரணமாக சில  தாமதம் ஏற்பட்டுள்ளது; கொலீஜி யத்தால் மீண்டும் வலியுறுத்தப்பட்ட பெயர்களுக்கு ஒப்புதல் அளிக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு ள்ளன. எனவே, இந்த விவகாரத்தை ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் கழித்து  மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி கோரினாா். இதைக் கருத்தில் கொண்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணை யை டிசம்பா் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.