புதுதில்லி, நவ. 24 - இந்திய அரசமைப்புச் சட்ட நாளை, நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிலையங்களில் கொண்டாடுமாறு, பல்கலைக்கழகத் துணை வேந்தர்களுக்கு யுஜிசி எனப்படும் பல்கலைக் கழக மானியக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு வின் செயலர் ரஜனிஷ் ஜெயின், அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர் களுக்கும் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதில், ‘’சுதந்திரத்துக்குப் பிறகு அரசி யலமைப்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட நாளைப் பின்பற்றி ஆண்டுதோறும் அரசியலமைப்பு நாள் நவம்பர் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நம் இந்திய ஜனநாயகம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது. நம் ஜன நாயகம் நாட்டின் மிகப் பழமையான ஜனநாய கம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் தாயும் கூட. பண்டைய இந்தியா முடியாட்சி அல்ல, அது ஜனநா யகத் தன்மை கொண்டது என்று சான்றுகள் காட்டு கின்றன. எனவே, இதை முன்னிட்டு ‘இந்தியா: ஜனநாயகத்தின் தாய்’ (பாரத்: லோக்தந்த்ரா கி ஜனனி) என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
1. காலை வழிபாட்டுக் கூட்டத்தில் அரசியலமைப்புச் சாசனத்தின் முன்னுரையை வாசிக்க வேண்டும். 2. அதே போல அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகளையும் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் வாசிக்க வேண்டும். 3. அடிப்படைக் கடமை களின் முக்கியத்துவத்தை அனைத்துக் கல்வி நிலையங்களிலும் விளக்க வேண்டும். 4. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் அறிவிப்பு பலகையில், அடிப்படைக் கடமைகள் பற்றி ஒட்டி வைக்கவேண்டும். - அனைத்து கல்வி நிலையங்களிலும் மேலே குறிப்பிட்ட செயல்பாடுகள் தங்கள் வளாகங்களில் நடை பெற்று இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’’. இவ்வாறு பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலர் ரஜனீஷ் ஜெயின் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார். முன்னதாக, நவம்பர் 26 அரசியலமைப்புத் தினத்தன்று, “இந்தியா: ஜனநாயகத்தின் தாய்” என்ற பெயரில் நாடு முழுவதும் கருத்தரங்கு களை நடத்த வேண்டும்; அந்த கருத்தரங்குகளில் மனு ஸ்மிருதி, சாணக்கிய நீதி, வேத, புராண, இதிகாசங்களில் குறிப்பிடப்படும் மன்னர்களின் பெருமை, சாதிப்பஞ்சாயத்து ஆகியவை குறித்து உயர்கல்வி பயிலும் மாணவர்கள் மத்தியில் ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட வேண்டும் என்று யுஜிசி தலைவர் எம். ஜெகதீஷ்குமாரும், அண்மையில் மாநில ஆளுநர்களுக்கு கடிதங்களை எழுதினார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.