சட்டமன்றங்களில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட முன் வரைவு களை கிடப்பில் போடக்கூடாது. ஒப்புதல் இல் லையென்றால் மாநில அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது ஆணவப் போக்குடன் நடந்து கொள்ளும் ஆளுநர்களின் தலையில் வைக் கப்பட்ட குட்டு ஆகும். மசோதாக்களுக்கு உரிய காலத்தில் அனு மதி வழங்க வேண்டுமென ஒன்றிய அரசும், குடியரசுத் தலைவரும் தகுந்த அறிவுரை வழங்க வேண்டுமென தமிழ்நாடு சட்டப் பேர வையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள் ள நிலையில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது. மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜ யன் உள்ளிட்டவர்கள் சாதகமான பதிலை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தந்த மாநில சட்டப் பேரவைகளில் இத்த கைய தீர்மானத்தை நிறைவேற்றுமாறு தமிழ் நாடு முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். தெலுங்கானா மாநில பாரத ராஷ்டிர சமிதி கட்சி அரசு உச்சநீதிமன்றத்தில் இது தொடர் பாக வழக்கு ஒன்றை தொடுத்தது. அந்த மாநி லத்தின் ஆளுநர் தமிழிசை சவுந்தரராசன் தெலுங்கானா சட்டப் பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக் காமல் கிடப்பில் போட்டுள்ளார் என்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஆளுநர்கள் முடி வெடுக்க கால நிர்ணயத்தை உச்சநீதிமன்றம் உருவாக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு அரசியல் சாசனத்தின் 200ஆவது பிரிவை மாநில ஆளுநர்கள் மனதில் கொள்ள வேண் டும் என அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான மசோதாவை தமிழக சட்டப் பேரவை நிறைவேற்றி அனுப்பியது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இது தொடர் பாக மாநில சட்ட அமைச்சர் ரகுபதியிடம் சில விளக்கங்களை கேட்டார். அவரும் உரிய விளக்கம் அளித்த பிறகும் மசோதாவுக்கு ஒப்புதல் தராதது மட்டுமல்ல, ஆன்லைன் சூதாட்ட நிறுவன பிரதிநிதிகளை அழைத்து ஆளுநர் குலாவினார். நீண்ட இழுத்தடிப்புக்கு மசோதாவை மாநில அரசுக்கே திருப்பி அனுப்பினார். இது தொடர்பாக மாநில அரசு கொண்டு வந்த அவ சரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் அதை பேரவையில் சட்டமாக நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பிய போது மறுத்தார். அவர் இது குறித்து எதுவும் வெளிப்படையாக சொல்லவில்லை என்ற போதும், எச்.ராஜா போன்ற ஆளுநர் மாளிகை மைக்செட்டுகள். இந்த விசயத்தில் ஒன்றிய அரசுதான் சட்டம் இயற்ற முடியும்; மாநில அரசுக்கு இந்த உரி மையில்லை என்று வியாக்கியானம் செய் தன.
இந்தப் பின்னணியில் இரண்டாவது முறை யாக ஆன்லைன் சூதாட்ட மசோதா நிறை வேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப் பப்பட்டது. ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்தி ருந்தால் அது நிராகரிக்கப்பட்டுவிட்டதாக பொருள் என ஆளுநர் ரவி தடித்தனமாக கூறினார். இந்த நிலையில் ஆளுநரின் கிண்டி மாளி கையின் கணக்கு வழக்குகளை மாநில அரசு கிண்டியதோடு ஆளுநர் குறிப்பிட்ட காலத்திற் குள் ஒப்புதல் அளிப்பதற்கான அறிவுரையை ஒன்றிய அரசும் குடியரசுத் தலைவரும் வழங்க வேண்டுமென முதல்வர் தனித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு அதே நாளில் ஒப்புதல் வழங்கு வதாக அறிவித்தார். ஆனால் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை தமிழ்நாட்டில் தொடங்கு வதற்கான மசோதாவை இரண்டாவது முறை நிறைவேற்றி அனுப்பிய பிறகும் ஆளுநர் இன் னமும் ஒப்புதல் வழங்கவில்லை என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் சட்டப் பேரவையிலேயே தெரிவித்தார். ஒரு மசோதாவை இரண்டாவது முறை நிறை வேற்றி அனுப்பினால் அதற்கு ஆளுநர் ஒப்பு தல் அளித்தே ஆக வேண்டும் என்பதை ஆர்.என். ரவி இந்த மசோதா விசயத்தில் மீறி வருகிறார். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்க ளிக்க வேண்டும் என்று கோரும் மசோதாவை இரண்டாவது முறை சட்டப் பேரவை நிறை வேற்றி அனுப்பிய பிறகும் ஆளுநர் எந்த முடி வும் எடுக்காமல் ஊறப் போட்டு வைத்திருக்கி றார். ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லையென்றால் திருப்பி அனுப்ப வேண்டு மென உச்சநீதிமன்றம் இடித்துரைத்துள்ளது தெலுங்கானா ஆளுநருக்கு மட்டுமல்ல, தமி ழக, கேரள, மேற்குவங்கம் உள்ளிட்ட எதிர்க் கட்சி ஆளும் மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும்.
ஆனால் தெலுங்கானா மாநில ஆளுநர் மாளிகை எந்த மசோதாவும் கிடப்பில் போடப் படவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் கூறி யுள்ளது. எந்த மசோதாவும் கிடப்பில் போடப் படவில்லையென்றால் தெலுங்கானா மாநில அரசு எதற்காக வழக்கு தொடுக்கப் போகிறது. ஆனால் இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த பின்னணியில் தம்மிடம் நிலுவையில் உள்ள மசோதாக்களில் ஒன்றான பொது வேலை வாய்ப்பு தொடர்பான மசோதாவை நிராக ரித்துள்ளதாக தெலுங்கானா ஆளுநர் கூறியது டன் மூன்று மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித் ததாகவும் கூறினார். எனினும் இன்னும் ஏழு மசோதாக்கள் தெலுங்கானா ஆளுநர் வசம் உள்ளது. தெலுங்கானா மாநில வளர்ச்சிக்கு ஆளு நர் தமிழிசை சவுந்தரராசன் தடையாக இருக்கி றார் என சட்டப் பேரவைத் தலைவர் குத்தா சுகேந்தர் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். தெலுங் கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டவர் தமிழிசை. அவருக்கு கூடுதல் பொறுப்பாக புதுவை துணைநிலை ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் இவர் பிரதான பொறுப்பை நிறைவேற்றுவதே இல்லை. புதுவையிலிருந்து கொண்டு அங்கு என்.ரெங்கசாமி தலைமையிலான அரசை ஆட்டிப் படைக்கிறார். தமிழக பாஜக தலைவர் போன்று நினைத்துக் கொண்டு தமிழக அரசியல் பிரச்ச னைகளிலும் கருத்து தெரிவித்து வருகிறார். ஆளுநர்கள் ஒன்றும் ஆகாயத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல. அவர்களுடைய அதி காரமும் வரம்புக்கு உட்பட்டதுதான். காலக் கெடு இல்லாமல் மசோதாக்களை நிறுத்தி வைப்பது உட்பட அவர்கள் மனம் போன போக்கில் செயல்படக்கூடாது என உச்சநீதி மன்றம் ஓங்கிக் குட்டியுள்ளது. ஆளுநர்களை அடக்கி வைப்பதற்கான பரப்புரை என்பது அகில இந்திய அளவில் சூடு பிடிக்கத் துவங்கி யுள்ளது.