states

img

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கொடூரம் சட்டக்கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர் திரிணாமுலுக்கு நெருக்கமானவர்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கொடூரம் சட்டக்கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர் திரிணாமுலுக்கு நெருக்கமானவர்

கல்லூரி சங்கத் தலைவராக ஆக்குவதாகக் கூறி 3 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம்

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கி ரஸ் ஆட்சி செய்து வருகிறது. முதல மைச்சராக மம்தா பானர்ஜி உள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களைப் போல  மேற்கு வங்கத்திலும் சட்டம்-ஒழுங்கு மிக மோச மான நிலையில் உள்ளது. இதனால் அங்கு  பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு  கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் மேற்கு வங்கத் தில் மட்டுமல்லாது, நாடு முழுவதும் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது. மாணவர்கள் நீதி வேண்டி பல மாதம் போராட்டம் நடத்தினர். இந்த பிரச்சனை உச்சநீதிமன்றம் வரை சென்றது. சட்டக்கல்லூரி மாணவி இந்நிலையில், தற்போது மேலும் ஓர் அதிர்ச்சி யளிக்கும் சம்பவம் கொல்கத்தா சட்டக் கல்லூரியில் நிகழ்ந்துள்ளது. கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் உள்ள தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவி ஜூன் 25ஆம் தேதி (புதன்கிழமை) இரவு கல்லூரி வளா கத்தில் உள்ள ஒரு அறையில் வைத்து கும்பல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி தெற்கு கொல்கத்தா டவுன் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார்.  அதன் பிறகு பார்க் சர்க்கஸ் தேசிய மருத்து வக் கல்லூரியில் மாணவிக்கு மருத்துவப் பரிசோ தனை செய்யப்பட்டு, அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. மாணவி அளித்த புகா ரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில்  பிரமித் முகர்ஜி, ஜே.அகமது, மனோஜித் மிஸ்ரா ஆகிய 3 பேர்  கைது செய்யப்பட்டனர். இதில் பிரமித் முகர்ஜி, ஜே.அகமது ஆகிய இருவரும் ஒரே கல்லூரியில் (வேறு கல்லூரி எனக் கூறப்படுகிறது) படிக்கின்ற னர். ஆனால் மனோஜித் மிஸ்ரா சம்பவம் நடந்த சட்டக் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். மனோஜித் திரிணாமுலுக்கு நெருக்கமானவர் இந்த கும்பல் பாலியல் வன்கொடுமை சம்ப வத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மனோஜித், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் மிக நெருக்கமானவர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபி ஷேக் பானர்ஜி, மாநில அமைச்சர் சந்திரிமா, மம்தா பானர்ஜியின் மைத்துனியும், கவுன்சில ருமான கஜாரி பானர்ஜி ஆகியோருடன் மனோ ஜித் மிஸ்ரா இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கல்லூரி சங்கத் தலைவராக ஆக்குவதாக வாக்குறுதி இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தா காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “திரிணாமுல் காங்கிரஸின் மாணவர் அமைப் பின் கல்லூரி சங்கத் தலைவராக ஆக்குவதாக வாக்குறுதி அளித்து வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவி கூறியுள்ளார். பாலியல் வன்முறை முயற்சியை உணர்ந்த மாணவி அங்கு இருந்து தப்ப முயன்றுள்ளார். ஆனால் மனோஜித்தும் அவ ரது 2 கூட்டாளிகளும் மாணவியை வலுக்கட்டாய மாக காவலாளியின் அறைக்கு இழுத்துச் சென்ற னர். காவலாளியை அங்கிருந்து விரட்டியடித்த பிறகு இந்த பாலியல் சம்பவம் நிகழ்ந்துள்ளது” என அவர் கூறினார். டிஎம்சிபி மழுப்பல் மாணவியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரி வித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான டிஎம்சிபி,”சட்டக் கல்லூ ரியின் டிஎம்சிபி பிரிவு பல ஆண்டுகளாகச் செயல்படவில்லை” என மழுப்பலாகக் கூறியுள்ளது.  தேசிய மகளிர் ஆணையம் இந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, 3 நாட்க ளுக்குள் கொல்கத்தா காவல் ஆணையர் விரி வான அறிக்கையைக் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் மீது  தாக்குதல்

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட சட்டக் கல்லூரி மாணவிக்கு நீதி வழங்கக் கோரி கொல்கத்தாவில் சனிக்கிழமை அன்று இந்திய மாணவர் மற்றும் வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் அரசின் காவல்துறை போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தி, கைது செய்தது. இடதுசாரி மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்எப்ஐ) மாநிலச் செயலாளர் தேபாஞ்சன் டே,”தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரியில் திரிணாமுல் மாணவர் அணி நீண்ட காலமாக கலவரத்தை நடத்தி வருகிறது. இந்த விஷயத்தில் காவல்துறையும் நிர்வாகமும் மௌனம் காத்து வருகின்றன. முதல் நபராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனோஜித் மீது ஊழல், பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் போன்ற பல குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே உள்ளன” என கண்டனம் தெரிவித்துள்ளார்.