states

img

நீதிபதி எஸ்.முரளிதர் நியமனத்தை நிறுத்தி வைத்து பழிவாங்கியது மோடி அரசு!

புதுதில்லி, அக்.12- ஒடிசா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி  எஸ். முரளிதரை சென்னை உயர் நீதிமன்றத் தின் தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கு நரேந்திர மோடி அரசு - எதிர்பார்த்ததைப் போலவே மறுப்பு தெரிவித்துள்ளது. முரளிதரை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கு கொலீ ஜியம் பரிந்துரை செய்திருந்த நிலையில், அந்தப் பரிந்துரையை நிறுத்தி வைத்துள்ளது. கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் ஜம்மு - காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்ற கொலீஜி யம் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி புதிய பரிந்  துரைகளை அளித்து இருந்தது.

ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டல், ராஜஸ்தான் மாநில  தலைமை நீதிபதியாகவும், ஒடிசா உயர்நீதி மன்ற நீதிபதி ஜஸ்வந்த், ஒடிசா மாநில உயர்  நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மும்பை  உயர் நீதிமன்ற நீதிபதி பி.பி. வராலே, கர்நாடக மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக வும், ஜம்மு - காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதி அலி மொகமத் மார்கிரே, ஜம்மு - காஷ்மீர் உயர்  நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் கொலீஜி யத்தால் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். மேலும் உத்தரகண்ட் உயர்நீதிமன்ற நீதிபதி  சஞ்சய் குமார் மிஸ்ரா, ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்றத்திற்கும், கேரள மாநில உயர்நீதி மன்ற நீதிபதி வினோத் சந்திரன், மும்பை உயர்  நீதிமன்ற நீதிமன்றத்திற்கும், ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்ற நீதிபதி அபரேஷ்குமார் சிங் திரிபுரா மாநில உயர்நீதிமன்றத்திற்கும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர். இந்த பரிந்துரைகளுக்கு செவ்வாயன்று ஒப்புதல் வழங்கிய நரேந்திர மோடி அரசு, ஒடிசா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ். முரளி தரை, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதி பதியாக நியமித்து வழங்கிய பரிந்துரையை மட்டும் ஏற்காமல் நிறுத்தி வைத்துள்ளது. முன்பு ஒருமுறை, நீதிபதி கே.எம். ஜோசப்பை உச்சநீதிமன்றத்திற்கு கொலீஜியம் பரிந்துரை செய்த போது, ஒன்றிய அரசு அதனை ஏற்கா மல் பிடிவாதம் காட்டியது. இது நாடு முழுவதும் விவாதங்களைக் கிளப்பிய நிலையில், ஒருவழி யாக அந்தப் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப் பட்டது.  இந்நிலையில்தான், ஒன்றிய பாஜக அர சானது, மீண்டும் நீதிபதி எஸ். முரளிதர் பணியிட மாற்ற விவகாரத்தில் கொலீஜியம் முடிவோடு முரண்பட்டு, நியமனத்தை நிறுத்தி வைத் துள்ளது.

அரசின் தவறைச் சாடிய நீதிபதி

கடந்த 2020-ஆம் ஆண்டு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தில்லியில் முஸ்  லிம்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது, பாஜக உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் சங்-பரிவாரத்தை சேர்ந்த கும்பல் தில்லி முழுவதும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. இதில் 54 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர்.  எனினும், இந்த வன்முறைக்கு காரணமான இந்துத்துவா மற்றும் பாஜக தலைவர்கள்மீது ஒன்றிய அரசின் உள்துறை கட்டுப்பாட்டி லுள்ள தில்லி காவல்துறை நடவடிக்கை எடுக்  காமல் அலட்சியம் காட்டி வந்தது. அப்போது இதுதொடர்பான வழக்கை விசாரித்த தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி டாக்டர் எஸ். முரளிதர்,  தில்லி காவல்துறையை கையில் வைத்திருக் கும் ஒன்றிய அரசை நேரடியாக கடுமையாக சாடினார். 

1984-ஆம் ஆண்டு போன்ற மற்றொரு நிகழ்வை இந்த நாட்டில் நடக்க அனுமதிக்க முடியாது என்று காட்டமாக கூறிய அவர், பாஜக  ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்குர், தில்லி  பாஜக தலைவர்கள் பர்வேஷ் வர்மா, அபய் வர்மா மற்றும் கபில் மிஸ்ரா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டார். இது ஒன்றிய பாஜக அரசுக்கு நெருக்கடி யை ஏற்படுத்திய நிலையில், தீர்ப்பளித்த அன்றே, இரவோடு இரவாக நீதிபதி எஸ். முரளி தர் பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத் திற்கு மாற்றப்பட்டார். தில்லி பார் அசோசி யேசன் இந்த இடமாற்றத்தை கடுமையாக விமர்சித்தது. தில்லி உயர்நீதிமன்ற வழக்கறி ஞர்கள் ஒரு நாள் நீதிமன்றத்தைப் புறக்கணித் துப் போராட்டம் நடத்தினர். சர்வதேச வழக்க றிஞர்கள் குழு, நரேந்திர மோடி அரசின் பழி வாங்கல் குறித்து அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதி யது. நீதிபதியின் இடமாற்றம் வழக்கமானது என்றும், பிப்ரவரி 12 ஆம் தேதியே, அவரைப் பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீ ஜியம் பரிந்துரை அளித்திருந்ததாகவும், அதன்  படியே நீதிபதி எஸ். முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் சமாளித்தது. 

ஆனால், தில்லி வழக்கறிஞர் சங்கம், எஸ். முரளிதர் போன்றவர்களின் இடமாற்றங்கள் எங்களின் உன்னதமான வழக்கறிஞர் பணிக்கு தீங்கு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல், பொதுவான மக்களின் நம்பிக்கையை சிதைக்  கும் வகையில் உள்ளது என்று கண்டனம் தெரி வித்தனர். எனினும் மோடி அரசு அந்த எதிர்ப்பு களை வழக்கம்போல புறந்தள்ளி விட்டது.  நீதிபதி எஸ்.முரளிதரும், கடந்த 2 ஆண்டு களில் பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத் தில் பணியாற்றி விட்டு, தற்போது ஒடிசா உயர்  நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவியை வகித்து வந்தார்.  இந்நிலையிலேயே, காலியாக இருக்கும் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி  இடத்திற்கு நியமனம் செய்து உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. அப்போதே மோடி அரசு இந்த பரிந்துரையை ஏற்குமா? என்று பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்  பினர். அதன்படியே, செப்டம்பர் 28-ஆம் தேதி  கொலீஜியம் அளித்த ஏனைய பரிந்துரை களுக்கு ஒப்புதல் அளித்துள்ள ஒன்றிய நரேந்  திர மோடி அரசு, நீதிபதி டாக்டர் எஸ். முரளி தரை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதி பதியாக நியமிக்கும் பரிந்துரையை மட்டும் நிறுத்தி வைத்துள்ளது. இது மறுபடியும் விவாதங்களைக் கிளப்பி யுள்ளது.
 

;