விவசாய விளை பொருட் களுக்கு ஆதார விலை உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை ஏற்க வலி யுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், சண்டிகர் பகுதி 200 விவசாய அமைப்பு கள் தில்லியில் போராட்டம் நடத்த ஹரியானா - தில்லி எல் லையில் கடந்த ஒரு வார கால மாக முகாமிட்டுள்ளனர். வழக் கம் போல போராட்டத்தை ஒடுக்க ஒன்றிய மோடி அரசு மற்றும் பாஜக ஆளும் ஹரியானா விவ சாயிகள் மீது தொடர் தாக்கு தலை நடத்தி வரும் நிலையில், விவசாயிகளை தில்லிக்குள் வர விடாமல் தடுக்க எல்லைகளில் சிமெண்ட் மூலம் கான்கிரீட் சுவர் எழுப்பியுள்ளது. ஞாயிறன்று நடைபெற்ற 4-ஆம் கட்ட பேச்சு வார்த்தை தோல்வியடைந்த நிலையில், புதனன்று மோடி அரசின் தடுப்புகளை அகற்ற புல்டோசர், கிரேன் உள்ளிட்ட வாகனங்களுடன் மீண்டும் தில்லியை நோக்கி விவசாயி கள் பிரம்மாண்ட பேரணியுடன் புறப்பட்டனர். கண்ணீர் புகைக்குண்டு மழை ஹரியானா - தில்லி எல்லைப் பகுதியான ஷம்புவில், தில்லி யை நோக்கி வந்த 2000-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள், 300 கார்கள், 10 பஸ், புல்டோசர், கிரேன் உள்ளிட்ட வாகனங்க ளில் என 15,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் குவிந்தனர். விவ சாயிகளை நோக்கி எச்ச ரிக்கை கூட செய்யாமல் பாஜக ஆளும் ஹரியானா காவல் துறை கண்ணீர் புகைக்குண்டு மற்றும் பெல்லட், ரப்பர் குண்டு கள் மூலம் விவசாயிகள் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. இளம் விவசாயி பலி ஹரியானா பாஜக அரசின் இந்த கொடூர தாக்குதலில் 21 வயது இளம் விவசாயியான சுப கரன் சிங் கழுத்தில் ரப்பர் குண்டு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஷம்பு எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மோடி அரசை கண்டித்து விவசாயிகளின் போராட்டத்தில் பலியான விவ சாயிகளின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.