states

img

பிபிசி ஆவண பட தடை ஏன்?

ஒன்றிய பாஜக அரசு 3 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று குஜராத் மாநிலத்தின் கோத்ரா வில் நிகழ்ந்த ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 பேர் உயிரிழந்தனர். இதை அடிப்படையாக வைத்து பாஜக - ஆர்எஸ்எஸ் இந்துத்துவா குண்டர்கள் குஜராத்தில் வன்முறையில் ஈடு பட்டனர். இந்த வன்முறையில் 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், 2000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 2,500 பேர் படுகாயம டைந்ததாகவும் 2005இல் நாடாளுமன்றத்தில்  அப்போதைய ஒன்றிய அரசு தகவல் தெரி வித்தது.

பிபிசி ஆவண படம்

நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரி வித்த அறிக்கையை அடிப்படையாக கொண் டும், குஜராத் கலவரம் பற்றி ரகசிய விசா ரணை நடத்தியும் கடந்த ஆண்டு இங்கிலாந் தின் பிரபல தனியார் ஊடக நிறுவனமான பிபிசி (BBC) “இந்தியா-மோடிக்கான கேள்விகள்” என்னும் தலைப்பில் ஆவணப்படத்தை வெளி யிட்டது. குஜராத் வன்முறையில் அப்போதைய முதல்வரும், பிரதமருமான நரேந்திர மோடிக் கும் தொடர்பு இருப்பதாகவும், அவரும் வன் முறைக்கு காரணமானவர் என பிபிசி ஆவணப் படத்தில் கூறப்பட்டது.  பிபிசி ஆவணப் படத்தால் தங்களது இந்துத்துவா அரசியலுக்கு பங்கம் வந்துவிடம் என்பதை உணர்ந்த மோடி அரசு, ஆவணப் படத்திற்கு தடைவிதித்தது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு    

உண்மையை மறைப்பது, பொய்களை ஆத ரிப்பதற்கு சமம் என்று ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் உட்பட நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படம் மீதான தடையை நீக்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொ டரப்பட்டது. தி இந்து பத்திரிகையின் ஆசிரியர் என்.ராம், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா, உச்சநீதிமன்ற மூத்த வழக் கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு திங்களன்று மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசார ணைக்கு வந்தது. விசாரணையின் பொழுது, “20 மாதங்களாகியும் ஒன்றிய அரசு இதுவரை கூடுதல் பதில் மனு தாக்கல் செய்யவில்லை” என்று மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,”இன்னும் 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்படும்” எனக் கூறினார். இதனை தொடர்ந்து அடுத்த 3 வாரத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்ய ஒன்றிய பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை 2025 ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்தது.           

மதரஸா : தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய பரிந்துரைக்கு உச்சநீதிமன்றம் தடை

மதரஸா மாணவர்களை அரசு பள்ளிக ளுக்கு மாற்ற வேண்டும், மதரஸா பள்ளி களை மூட வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மாநிலங்களுக்கு பரிந்து ரைத்து கடிதம் எழுதியிருந்தது. இதனைத் தொ டர்ந்து பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் மதரஸா பள்ளி மாண வர்களை அரசு பள்ளிகளுக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்தது. இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு திங்களன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு விசார ணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில், ”சிறுபான்மையினர் நடத்தக்கூடிய பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவிட ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும், தேசிய குழந்தைகள் பாது காப்பு ஆணையத்துக்கும் அதிகாரம் இல்லை”  என்று வாதிடப்பட்டது.  இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பரிந்து ரைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் இதனை செயல்படுத்த உத்தரவிட்ட உத்தரப்பிர தேசம் மற்றும் திரிபுரா அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.