tamilnadu

img

சிபிஎம் மயிலாடுதுறை மாவட்டக்குழு அலுவலகம் திறப்புவிழா

மயிலாடுதுறை, அக். 21 - மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு புதிய அலுவலகமான தோழர்.கோ.பாரதிமோகன் நினைவகத்தை திங்களன்று மாலை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் திறந்து வைத்தார். நீதிமன்ற சாலையில் ரூ. 1 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் மக்களின் பங்களிப்பில் கட்டப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலக திறப்பு விழாவிற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஸ்டாலின் வரவேற்றார். கட்சியின் கொடியினை மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஏற்றி வைத்தார்.  அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் புதிய அலுவலகத்தை தோழர்களின் விண்ண திரும் முழக்கத்திற்கிடையே திறந்து வைத்தார்.  மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் அலுவலக கல்வெட்டினை திறந்து வைத்தார். தோழர்கள் பி.எஸ்.தனுஷ்கோடி, கே.ஆர். ஞானசம்பந்தம் நினைவு கூட்ட அரங்கினை மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமு வேல்ராஜ், தோழர்.எஸ். சேஷாத்திரி நினைவு நூலகத்தினை மூத்த தோழர் என்.சீனிவாசன் திறந்து வைத்தனர்.  நாகை மாவட்டச் செயலாளர் வீ.மாரிமுத்து, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, தஞ்சாவூர் சின்னை. பாண்டியன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செய லாளர் சாமி.நடராஜன், இந்திய ஜனநாயக வாலி பர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஏ.வி.சிங்கார வேலன், மூத்த தோழர் குஞ்சிதம் பாரதிமோகன், கேஆர்ஜி. வேதவள்ளி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். துரைராஜ், ப. மாரியப்பன், டி.சிம்சன், ஏ.ரவிச்சந்திரன், சி.விஜயகாந்த், ஜி. வெண்ணிலா, கே.பி.மார்க்ஸ் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள், விவசாயிகள் சங்க, விவசாயத் தொழிலாளர் சங்கம், வாலிபர், மாதர், மாணவர் சங்க நிர்வாகி கள், தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் ஏராள மானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  விழாவிற்கு முன்னதாக, மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியில் இருந்து பேரணியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கட்சி  அலு வலகத்திற்கு வந்தனர். தொடர்ந்து மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கட்சிக் கொடியை ஏற்றினார்.