tamilnadu

img

புதுச்சேரியில் ரேசன் கடைகள் திறப்பு!

புதுச்சேரி, அக். 21 - புதுச்சேரியில் 8 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட ரேசன் கடைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான போராட்டத்தைத் தொடர்ந்து, திங்களன்று மீண்டும் திறக்கப்பட்டு, அரிசி - சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. இதனை வரவேற்று, தட்டாஞ் சாவடி குடிமைப்பொருள் வழங்கல் துறை அருகில் திங்களன்று (அக்.21) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம் தலைமையில், அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் இனிப்பு வழங்கினார். மாநில செயற்குழு உறுப் பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், கொளஞ்சியப்பன், சீனுவாசன், பிரபுராஜ், கலியமூர்த்தி, சத்தியா, மூத்த தலைவர் த. முருகன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இடைக் குழு செயலாளர்கள் மற்றும் திரளான கட்சி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

சிறப்புக் கட்டுரை : 4