வியாழனன்று காலை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, தேசிய தலைவர் மல்லி கார்ஜுன கார்கே, ராகுல் காந்தி எம்பி உள்ளிட்டோர் செய்தியாளர் களை சந்தித்தனர். இந்த சந்திப்பின் பொழுது சோனியா காந்தி கூறுகை யில், “இந்திய தேசிய காங்கிரஸை நிதி ரீதியாக முடக்கு வதற்கு பிரதமர் மோடியால் திட்டமிட்ட முயற்சி நடந்து வருகிறது. பொதுமக்களி டம் இருந்து வசூலிக்கப்படும் வெளிப் படையான நிதி முடக்கப்பட்டு எங்கள் கணக்குகளில் இருந்து வலுக்கட்டாய மாக பணம் பிடுங்கப்படுகிறது. ஒருபுறம் உச்சநீதிமன்றத்தால் அரசியலமைப் புக்கு முரணானது என அறிவிக்கப்பட்ட தேர்தல் பத்திர விவகாரம் உள்ளது. தேர்தல் பத்திரங்கள் பாஜகவுக்கு பெரி தும் பயனளித்த நிலையில், மறுபுறம் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் நிதி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இது முன்னெப்போதும் இல்லாதது என்ற நிலையில், இது ஜனநாயக விரோதமா னது என நாம் அனைவரும் நம்புகிறோம்” என்று பேசினார்.