states

img

உலகம் முழுவதும் போரில் கொல்லப்பட்ட குழந்தைகளை விட இஸ்ரேலால் கொல்லப்பட்ட பாலஸ்தீன குழந்தைகள் அதிகம்

காசா,அக்.30- 2019 ஆம் ஆண்டு முதல் உலகெங்கிலும் நடத்தப்பட்ட போரில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை  விட அதிகளவிலான பாலஸ்தீன குழந்தைகள் கடந்த மூன்று வாரங்களில் இஸ்ரேல் ராணுவத்தால்  கொல்லப்பட்டுள்ளனர் என  ‘சேவ் தி சில்ரன்’ என்ற அரசு சாரா அமைப்பு தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று அந்த அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம், அக்டோபர் 7 தாக்குதல்  துவங்கி யது முதல் பாலஸ்தீனத்தின் காசாவில் 3,300க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப் பட்டுள்ளனர் என்றும் மேற்குக் கரையில் 36 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு 24 நாடுகளில் 2,985  குழந்தைகளும், 2021 ஆம் ஆண்டு  2,515  குழந்தைகளும், 2020 ஆம் ஆண்டு  22 நாடு களில் 2,674 குழந்தைகளும் கொல்லப் பட்டுள்ளனர் என குழந்தைகளும் ஆயுத மோதல்களும் தொடர்பான ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது. தற்போது இஸ்ரேல் படு கொலை செய்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, ஐ.நா. கூறிய முந்தைய கால  எண்ணிக்கையை விட அதிகமாகும்.

இது தவிர காசாவில் 1,000 க்கும் மேலான குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்  என்றும், அவர்களில் பெரும்பாலும் கட்டட  இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி மரணித் திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள் ளது. காசாவில் கொல்லப்பட்ட 8,000க்கும் மேற்பட்டவர்களில் 40 சதவீதத்திற்கும் அதிக மானோர் குழந்தைகள். மேலும் காசாவில் போர் தொடங்கியதில் இருந்து 6,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்து ள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ‘சேவ் தி சில்ட்ரன்ஸ் இயக்குனர்’ ஜேசன்  லீ கூறுகையில், “குழந்தைகளின்  பாது காப்பை உறுதி செய்வதற்கான ஒரே வழி போர் நிறுத்தம்தான்.போர் குறித்த விவா தத்திற்கு  செலவிடப்படும் ஒவ்வொரு நாளும்  மேலும் அதிக குழந்தைகளைக் கொலை செய்கிறது மற்றும் காயப்படுத்து கிறது. குழந்தைகள் பள்ளிகளிலும் மருத்துவ மனைகளிலும் பாதுகாப்பைத் தேடும் போதும் எல்லா சூழலிலும்  பாதுகாக்கப்பட வேண்டும்” என்றார். காசாவிற்குள் செல்ல வேண்டிய எரிபொருட்களை, மின்சாரத்தை இஸ்ரேல் ராணுவம் துண்டித்தது. இதனால் மருத்து வமனைகள்  முடக்கப்பட்டன. இதனால்  சுகாதார அமைப்பு முழுமையாக குலைந்து விட்டது என காசா சுகாதார  அமைச்சகம் அறிவித்தது. இந்தச் சூழ்நிலை காசாவில் பிறந்த குழந்தைகள்,கருவில் உள்ள குழந்தைகள் உட்பட அனைத்துக் குழந்தை களின் உயிரையும் ஆபத்துக்குள்ளாக்கி யுள்ளது. கொடூரமான வான்வழித்  தாக்குதலை தொடர்ந்து காசாவிற்குள்  தரைவழி தாக்கு தலை இஸ்ரேல் நடத்தி வரும் நிலையில் இந்த அறிக்கை வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.