திக்விஜய் சிங் விளாசல்
அஜ்மீர், ஏப்.16- “நாட்டின் விடுதலைக்காக காங்கிரசார் போராட்டம் நடத்தி யபோது, பிரிட்டிஷ் ஆட்சியாளர் களுக்கு வால் பிடித்துக் கொண்டி ருந்தவர்கள்தான் ஆர்எஸ்எஸ், இந்து மகா சபை உள்ளிட்ட இந் துத்துவா கூட்டத் தைச் சேர்ந்தவர் கள்” என்று திக் விஜய் சிங் கடு மையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளரும், மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான திக் விஜய் சிங், ராஜஸ்தான் மாநி லம் அஜ்மீரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: “காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370-க்கு முதலில் பாஜக நிறு வனர் சியாமா பிரசாத் முகர்ஜி எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால், பின்னர் அது சட்டமாக்கப்பட்ட போது அதற்கு ஆதரவு தெரிவித்தார். 1942-இல் அண்ணல் காந்தி யடிகள் ஒத்துழையாமை இய கத்தை தொடர்ந்த போது, சியாமா பிரசாத் முகர்ஜி பிரிட்டிஷாருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில் ‘ஒத்துழை யாமை இயக்கத்தில் ஈடுபடும் காங்கிரசாரைப் பிடித்து சிறை யில் போடுங்கள்’ எனத் தெரி வித்திருந்தார். இது வரலாற்று உண்மை. பிரிட்டிஷாருக்கு எதிராக காங்கிரஸ் சுதந்திர போராட்டம் நடத்தியபோது பிரிட்டிஷாருக்கு ஆதரவாக பக்க பலமாக நின்ற வர்கள்தான், ஆர்எஸ்எஸ், இந்து மகா சபை மற்றும் வி.டி. சாவர்க்க ரின் இந்துத்துவா வகையறாக்கள். தற்போது, பாஜக ஆட்சியில் சமூகத்தில் வன்முறை, வெறுப்பு பரப்பப்படுகிறது. அமைதியற்ற சூழல் நிலவுகிறது. அப்பாவி களின் வீடுகள் தீக்கிரையாக்கப் படுகின்றன. நரேந்திர மோடி ஆட்சியில் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வேலைவாய்ப் பின்மை உயர்ந்து விட்டது. நாட்டில் ஏழைகள் மிகவும் ஏழை கள் ஆகிவருகின்றனர்.” இவ்வாறு திக்விஜய் சிங் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.